க்ரைம்

சென்னை | ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ர​வுடி வீட்​டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்​பட்​டுள்​ளது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சென்னை வானகரம் தண்​டலம் அண்​ணாநகர் சாந்தி தெரு​வைச் சேர்ந்​தவர் ராஜ்கு​மார் என்ற ராஜி (27).

ஆட்டோ ஓட்​டுந​ரான இவர் மீது பல்​வேறு குற்ற வழக்​கு​கள் உள்​ளன. மேலும் வானகரம் காவல் நிலை​யத்​தின் சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி பட்​டியலிலும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

கடந்த மே மாதம் வழக்கு ஒன்​றில் சிக்கி சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அவரது மனைவி ஆனந்தி (26) வீட்​டில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு 2 பைக்​கு​களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்​பல், பெட்​ரோல் நிரப்​பப்​பட்ட 2 பாட்​டில்​களுக்கு தீ வைத்து ராஜ்கு​மாரின் வீட்​டின் வாசல் பகு​தியை நோக்கி வீசி​விட்டு தப்​பிச் சென்​றது.

பொருட்கள் எரிந்தன

குண்​டு​கள் வெடித்து சிதறிய​தில் வீட்​டின் முன்​புறத்​தில் இருந்த சில பொருட்​கள் தீப்​பிடித்து எரிந்​தன. அதிர்​ஷ்ட​வச​மாக, வீட்​டில் இருந்​தவர்​களுக்கு எந்த காய​மும் ஏற்​பட​வில்​லை.

தகவல் அறிந்த வானகரம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்​தினர். ஆனந்தி அளித்த புகாரின் பேரில் வழக்​குப்​ப​திவு செய்​து, கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து பெட்​ரோல் குண்​டு​களை வீசி விட்டு தப்​பிய மர்ம கும்​பலை தேடி வரு​கின்​றனர்.

போலீ​ஸாரின் முதற்​கட்ட விசா​ரணை​யில், ராஜ்கு​மார் மற்​றும் மற்​றொரு தரப்​பினர் அப்​பகு​தி​யில் கஞ்சா விற்​பனை​யில் ஈடு​பட்டு வந்​த​தாக​வும், அதுதொடர்​பாக இரு தரப்​புக்​கும் நீண்ட நாட்​களாக முன்​விரோதம் இருந்து வந்​த​தாக​வும் தெரிய​வந்​துள்​ளது.

அந்த முன்​விரோதம் காரண​மாகவே ராஜ்கு​மாரை அச்​சுறுத்​தும் நோக்​கில் அவரது வீட்​டின் மீது பெட்​ரோல் குண்​டு​கள் வீசப்​பட்​டிருக்​கலாம் என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். மர்ம கும்​பலை விரை​வில் கைது செய்ய தனிப்​படை போலீ​ஸார்​ நடவடிக்​கை மேற்​கொண்​டுள்ளனர்​.

SCROLL FOR NEXT