சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா லட்சுமி (36). இவரது மகள் படித்து வரும் தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், அவரது மகனுக்கு தனியார் பொறியியல் கல்லூரியில் பணம் கொடுத்து சீட்டு வாங்கி தந்து உதவுமாறு சுகன்யாவிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, உறவினர்கள் மூலம் அறிமுகமான சக்தி என்பவரை சுகன்யா அணுகிய போது, தனியார் பொறியியல் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக அவர் கூறியுள்ளார்.
இதை நம்பிய சுகன்யா அவரிடம் ரூ.5.08 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சக்தி,கல்லூரியில் சீட்டு வாங்கித் தரா
மல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து, சுகன்யா, அவரிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டும், சக்தி பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால், கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய சக்தி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு, சுகன்யா லட்சுமி திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கரையான்சாவடி, சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த சக்தியை (27), கைது செய்து சிறையில் அடைத்தனர்.