க்ரைம்

சத்​தி​யமங்​கலம்: பள்ளி காலை உணவில் விஷப் பவுடர் கலக்கச் சொல்லி மிரட்டியவர் கைது

அசம்பாவிதம் தவிர்ப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் மனைவியின் சமையலர் பணி பறிபோன ஆத்திரத்தில் ஆசிரியர்களுக்கான மாதிரி உணவில் விஷப்பவுடர் கலக்கச் சொன்னவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்​டம் சத்​தி​யமங்​கலம் அருகே ராம பையலூர் பகு​தி​யில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்​பள்​ளி​யில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். பள்​ளி​யில் தமிழக அரசின் காலை உணவுத் திட்​ட​மும் செயல்​பாட்​டில் உள்​ளது.

கடந்த 31-ம் தேதி காலை உணவு சாம்​பாரில் வழக்கத்தைவிட மஞ்​சள் தூள் அதி​க​மாக இருப்​ப​தாகத் தெரிந்தது. இதுகுறித்து சமையலர்களிடம் கேட்​ட​போது, அளவாகவே மஞ்​சள் தூள் சேர்த்​த​தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேற்​கொள்​ளப்​பட்ட விசா​ரணை​யில், அதே பகு​தி​யைச் சேர்ந்த ஆறு​முகம் என்​பவர், மாணவி ஒரு​வரை மிரட்​டி, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்​காக வைத்​திருந்த சாம்​பாரில் விஷப்​பவுடரைக் கலக்​கு​மாறு கூறியது தெரிய​வந்​தது.

இதுகுறித்து சத்​தி​யமங்​கலம் காவல் நிலை​யத்​தில் தலைமை ஆசிரியை புகார் அளித்​தார். போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, ஆறு​முகத்தை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். இதில், ஆறு​முகத்​தின் மனைவி அந்​தப் பள்​ளி​யில் காலை உணவுத் திட்​டத்​தின் சமையல​ராக பணி​யாற்றி வந்​ததும், அவர் சரி​யாக சமையல் செய்​யாத​தால் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக வேறு ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டதும் தெரியவந்​தது. இதனால் ஆத்​திரமடைந்த ஆறு​முகம், மாணவி ஒரு​வரை மிரட்​டி, சாம்​பாரில் விஷப்​பவுடரைக் கலக்​கு​மாறு கூறிய​தாக போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து ஆறு​முகத்தை போலீ​ஸார் கைது செய்​தனர். அதிர்​ஷ்ட​வச​மாக, குழந்​தைகள் சாப்​பிடு​வதற்​கான சாம்​பாரில் விஷப் பவுடர் கலக்​கப்​ப​டாத​தால்​ பெரும்​ விபரீதம்​ தவிர்க்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT