க்ரைம்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்ட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​​​திரு​புவனம் ராமலிங்​கம் கொலை வழக்​கில் தேடப்​பட்டு வந்த 2 பேரை தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அரு​கே​யுள்ள திரு​புவனத்​தைச் சேர்ந்​தவர் பாமக முன்​னாள் நகரச் செய​லா​ளர் ராமலிங்​கம். அப்​பகு​தி​யில் மத மாற்​றத்​தில் ஈடு​பட்ட சிலரைக் கண்​டித்​த​தால் 2019 பிப்​ர​வரி மாதம் மர்ம நபர்​களால் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக திரு​விடைமருதூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, குறிச்​சிமலை பகு​தி​யைச் சேர்ந்த முகமது ரியாஸ், திரு​புவனம் நிஸாம் அலி, சர்​புதீன், முகமது ரிஸ்​வான், திரு​விடைமருதூர் அசா​ருதீன், திரு​மங்​கலக்​குடி முகமது தவ்​பீக், முகமது பர்​வீஸ், அவணி​யாபுரம் தவ்​ஹித் பாட்​சா, காரைக்​கால் பெரு​மாள் கோயில் தெரு​வைச் சேர்ந்த முகமது ஹசன் குத்​தூஸ் உள்​ளிட்​டோரை அடுத்​தடுத்து கைது செய்​தனர்.

மேலும், தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​தைச் சேர்ந்​தவர்​களும் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். பின்​னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்​படைக்​கப்​பட்​டது. என்ஐஏ அதி​காரி​கள் ராமலிங்​கம் கொலை தொடர்​பாக புதி​தாக வழக்கு பதிவு செய்​து, அடுத்​தடுத்து கைது நடவடிக்கை மேற்​கொண்​டனர்.

தொடர்ந்​து, இந்த வழக்​கில் 18 பேர் மீது என்ஐஏ அதி​காரி​கள், சென்னை பூந்​தமல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தனர். மேலும், தலைமறை​வாக இருக்​கும் நபர்​களைக் கைது செய்ய தீவிர நடவடிக்​கைகளை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில், இந்​தக் கொலை வழக்​கில் தொடர்​புடைய முகமது அலி ஜின்னா மற்​றும் அவருக்கு அடைக்​கலம் கொடுத்த அஸ்​மத் ஆகியோரை என்ஐஏ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர். பின்​னர், கைது செய்​யப்​பட்ட இரு​வரை​யும் பூந்​தமல்​லி​யில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றத்​தில், நீதிபதி மலர்​விழி முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தினர்.

முகமது அலி ஜின்​னாவை ஜன. 18-ம் தேதி வரை​யும், அஸ்​மத்தை ஜன. 19-ம் தேதி வரை​யும் நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, இருவரும் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இரு​வரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்​கத் திட்​ட ​மிட்​டிருப்​ப​தாக​வும், ராமலிங்​கம் கொலை வழக்​கில் தொடர்​புடைய அனை​வரை​யும் கைது செய்து விட்ட​தாக​வும் என்ஐஏ அதி​காரி​கள் தெரிவித்​தனர்.

SCROLL FOR NEXT