க்ரைம்

முக்தார், திருச்சி சூர்யா குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முக்தார், திருச்சி சூர்யா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா.

இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 3-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புப்படுத்தி ‘யூடியூபர்’ முக்தார் அகமது, திருச்சி சூர்யா ஆகியோர் இழிவான கருத்துகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, திருச்சி சூர்யா (34) கடந்த 4-ம் தேதியும், முக்தார் அகமதுவை (48) 9-ம் தேதியும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT