க்ரைம்

அம்பத்தூரில் ரூ.16.10 லட்சம் கடனுக்காக ரூ.1.15 கோடி வசூலித்தவர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: அம்​பத்​தூரில் ரூ.16.10 லட்​சம் கடனுக்​காக வியா​பாரி​யிடம் ரூ.1.15 கோடி வசூலித்​தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்​னை, அம்​பத்​தூர், திரு​வேங்​கடம் நகரைச் சேர்ந்​தவர் நடராஜன். ‘டைல்​ஸ்’ விற்​பனை செய்​யும் கடை நடத்தி வந்த இவர், தனது தொழில் தேவைக்​காக, வட்​டிக்கு பணம் கொடுக்​கும் தொழில் செய்த வந்த மணி​கண்​டபுரம் காளி​முத்து (46) என்​பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.16.10 லட்​சம் கடன் வாங்​கி​யுள்​ளார்.

அப்​போது, நடராஜனிடம் இருந்து கையெழுத்​திட்ட தேதி, பெயர், தொகை நிரப்​பப்​ப​டாத புரோ நோட், 6 வங்கி காசோலைகள், 3 ஸ்டாம்ப் பேப்​பர்​களை காளி​முத்து பெற்​றுள்​ளார்.

பிறகு நடராஜன், தான் வாங்​கிய கடனை முறை​யாக வட்​டி​யுடன் திருப்பி செலுத்தி வந்த நிலை​யில், காளி​முத்து வட்​டிக்கு மேல் வட்டி போட்டு வந்​த​தாக கூறப்​படு​கிறது.

அந்த வகை​யில், காளி​முத்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நடராஜனை மிரட்​டி​யும், அடித்​தும் பல தவணை​களாக ரூ. 1,15,02,800-ஐ பெற்​றுள்​ளார்.

இச்​சூழலில், மேலும் ரூ.90 லட்​சம் கொடுக்க வேண்​டும் என்று கூறி நடராஜனுக்கு தொடர்ந்து காளிமுத்து கொலை மிரட்​டல் விடுத்து வந்​துள்​ளார். இதனால், அதிர்ச்​சி​யடைந்த நடராஜன், காளி​முத்து மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுத்​து, தனது பணத்தை மீட்​டுத் தரு​மாறு சமீபத்​தில் ஆவடி காவல் ஆணை​யர் செந்​தில்​கு​மாரிடம் புகார் அளித்​தார்.

அதன்​படி ஆவடி மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காளி​முத்​துவை நேற்​று முன்​தினம்​ கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT