க்ரைம்

சென்னை | மூதாட்டிகளிடம் நூதன முறையில் தொடர்ச்சியாக நகைகளை திருடிய நபர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மூதாட்டிகளிடம் தொடர்ச்சியாக நூதன முறை​யில் நகை திருட்​டில் ஈடு​பட்டு வந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை சூளை, ஆண்​டியப்​பன் நாயக்​கன் தெரு​வைச் சேர்ந்​தவர் மூதாட்டி காளி​யம்​மாள் (76).

கடந்த 17-ம் தேதி காலை சூளை, வி.​வி.கோ​வில் அருகே உள்ள நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு மாத்​திரைகள் வாங்க சென்று கொண்​டிருந்​தார்.

          

அப்​போது, அங்கு வந்த 50 வயதுடைய ஆண் ஒரு​வர், காளி​யம்​மா​விடம் நலம் விசா​ரித்​து, இது ரமலான் மாதம் என்​ப​தால் ஏழை மக்​களுக்கு தொழில் அதிபர் ஒரு​வர் நகை மற்​றும் பணம் கொடுக்​கிறார் என நம்​பிக்​கை​யுடன் பேச்சு கொடுத்​தார்.

இதை உண்மை என நம்​பிய மூதாட்​டி, தன்னை அங்கு அழைத்​துச் செல்​லும்​படி கூறி​னார். இதையடுத்​து, அந்த நபர் சற்று தொலை​வுக்கு அழைத்​துச் சென்​று, ஒரு பூட்​டிய கடை​யின் அருகே அமர வைத்​து, ‘ஏழைகளுக்கு மட்​டுமே தொழில் அதிபர் நகை, பணம் கொடுக்​கிறார்.

எனவே, நீங்​கள் இப்​படி நகை அணிந்து வந்​தால் அந்த உதவி கிடைக்​காது. எனவே, உங்​களது நகைகளை கழட்டி கொடுங்​கள், நான் வைத்​துக் கொள்​கிறேன். நலத்​திட்ட உதவி கிடைத்த உடன் உங்​களது நகைகளை திரும்ப கொடுத்து விடு​கிறேன் என தெரி​வித்​துள்​ளார்.

இதை உண்மை என நம்​பிய மூதாட்டி காளி​யம்​மாள், தனது கம்​மல் மற்​றும் மோதிரத்தை கழற்றி கொடுத்​தார். அதை பெற்​றுக் கொண்ட அந்த நபர், இங்​கேயே சிறிது நேரம் இருங்​கள்.

அங்கு கூட்​டம் எவ்​வளவு உள்​ளது என பார்த்து விட்டு வரு​கிறேன் என சென்​றவர் மீண்​டும் திரும்பி வரவில்​லை. நீண்ட நேர​மாகி​யும் அந்த நபர் வராத​தால், தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த காளி​யம்​மாள் இது தொடர்​பாக வேப்​பேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், நூதன முறை​யில் மூதாட்​டி​யிடம் நகைகளை திருடியது சென்னை டி.பி சத்​திரத்​தைச் சேர்ந்த திரு​மலை (50) என்​பது தெரிந்​தது. தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவரிட​மிருந்து 9 கிராம் எடை கொண்ட தங்க கம்​மல் மீட்​கப்​பட்​டது. விசா​ரணை​யில், திரு​மலை கடந்த 16-ம் தேதி இதே போல திருவிக நகர் பகு​தி​யில் ஒரு மூதாட்​டியை ஏமாற்றி தங்க நகை திருடிச் சென்​றதும், இதே பாணி​யில் அவர் பல மூதாட்​டிகளிடம் கைவரிசை காட்டி இருந்​ததும் தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT