க்ரைம்

சென்னை | ஓய்வு பெற்ற ராணுவ ஊழியரை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: நடத்​தை​யில் சந்​தேகமடைந்து ஓய்வு பெற்ற ராணுவ ஊழியரை கொலை செய்த வழக்​கில், காவலா​ளிக்கு ஆயுள் தண்​டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

பெரம்​பூர், மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்த வெங்​கட​சாமி ராணுவத்​தில் கிளார்க்​காக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். இவரது வீட்டுக்கு அருகில் தனி​யார் நிறுவன காவலா​ளி​யாக பணி​யாற்றி வரும் துளசையா (54) என்​பவர் வசித்து வந்​தார்.

          

துளசை​யா​வின் மனை​வி​யிடம் வெங்​கட​சாமி அடிக்​கடி பேசி வந்​துள்​ளார். இதை துளசையா கண்​டித்​துள்​ளார். இதனால் ஏற்​பட்ட தகராறு முற்​றி, கடந்த 2024 அக்​.11-ம் தேதி வெங்​கட​சாமியை கத்​தி​யால் துளசையா வெட்​டினார். இதில் படு​காயமடைந்த வெங்​கட​சாமி, சிகிச்சை பலனின்றி இறந்​தார்.

இந்த கொலை சம்​பவம் தொடர்​பாக, திருவிக நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து துளசை​யாவை கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நடந்​தது.

காவல்​துறை தரப்​பில் மாநகர குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜி.தேவ​ராஜன் ஆஜராகி, கொலை சம்​பவத்தை நேரில் பார்த்த சாட்​சிகள் உள்​ள​தாக​வும், மரணத்​துக்கு நடத்​தை​யில் ஏற்​பட்ட சந்​தேக​மும், கத்​தி​யால் ஏற்​பட்ட வெட்​டுக்​காய​மும் தான் காரணம் என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி, காவல்​துறை தரப்​பில் கொலைக் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளதால், குற்​றம் சாட்​டப்​பட்ட துளசை​யா​வுக்கு ஆயுள் தண்​டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம்​ வி​தித்​து தீர்ப்​பளித்​தார்​.

SCROLL FOR NEXT