க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்​பட்ட ரூ.6 கோடி மதிப்​பிலான உயர்தர ஹைட்​ரோ​போனிக் கஞ்​சாவை சுங்​கத் துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். இது தொடர்​பாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

தாய்​லாந்​தின் பாங்​காக்​கி​லிருந்து நேற்று முன்​தினம் இரவு சென்னைக்கு ஏர் ஏசியா விமானத்​தில் வந்த பயணி​களை சுங்​கத் துறை ஏர் இன்​டெலி ஜென்ட் அதி​காரி​கள் கண்​காணித்​தனர். அப்​போது, ஓர் இளைஞரை சந்​தேகத்​தின்​பேரில் தடுத்து நிறுத்தி விசா​ரித்​தனர்.

          

அந்த இளைஞர் முன்​னுக்​குப் பின் முரணாக பதிலளித்​த​தால், அவரது உடைமை​களை சோதனை​யிட்​டனர். அவரது சூட்​கேஸைத் திறந்து பார்த்​த​போது, அதில் பாலிதீன் கவர்​களால் சுற்​றப்​பட்​டிருந்த 15 பார்​சல்​கள் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அவற்றை பிரித்​துப் பார்த்​த​போது, அதில் 5.9 கிலோ எடை​யுள்ள உயர்தர ஹைட்​ரோ​போனிக் கஞ்சா இருந்​தது தெரிய​வந்​தது. இதுகுறித்து, இளைஞரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவர் கேரளாவைச் சேர்ந்​தவர் என்​பதும்,பணத்​துக்​காக குரு​வி​யாக செயல்​பட்​டதும் தெரிய​வந்​தது.

மேலும், இந்த கஞ்​சாவை பெற்​றுக்​கொள்ள விமான நிலை​யத்​துக்கு வெளியே தயா​ராக ஒரு​வர் காத்​திருப்​ப​தாக​வும், அவரிடம் இந்த கஞ்சா பொட்​டலங்​களை ஒப்​படைக்க இருப்​ப​தாக​வும் அந்த இளைஞர் தெரி​வித்​துள்​ளார்.

தொடர்ந்து விசா​ரணை: இதையடுத்து விமான நிலை​யத்​துக்கு வெளியே காத்​திருக்​கும் அந்த நபரைப் பிடிக்க அதி​காரி​கள் விரைந்​தனர். அதற்​குள் கேரள இளைஞர் பிடிபட்ட தகவலறிந்த அந்த நபர் அங்​கிருந்து தப்​பிச் சென்​றார்.

தற்​போது கைது செய்​யப்​பட்​டுள்ள இளைஞரிடம் சுங்​கத்​துறை அதி​காரி​கள் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

பறி​முதல் செய்​யப்​பட்ட கஞ்​சா​வின் சர்​வ​தேச மதிப்பு ரூ.6 கோடி எனவும், பிடிபட்ட இளைஞர் இப்​போது​தான் முதல் முறை​யாக குரு​வி​யாக செயல்​பட்​டிருப்​ப​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT