க்ரைம்

குன்றத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: வீட்டு உரிமையாளர் போக்சோவில் கைது

செய்திப்பிரிவு

குன்​றத்​தூர்: குன்றத்தூர் அடுத்த தரப்​பாக்​கம் பகு​தி​யில் கணவன், மனைவி தங்​களது 5 வயது மகளு​டன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தனர். இந்​நிலை​யில், கணவன் வேலைக்​குச் சென்​றிருந்​த​போது, வீட்​டில் இருந்த குழந்தை காணா​மல் போன​தால் பதற்​றமடைந்த தாய், அக்​கம் பக்​கத்​தில் தேடிப் பார்த்​தார்.

எங்கு தேடி​யும் குழந்தை கிடைக்​காத நிலை​யில், வீட்​டின் மொட்டை மாடிக்​குச் சென்று பார்த்த போது, அங்​கிருந்த கழி​வறை​யில் இருந்து குழந்தை அழுதபடி வெளியே வந்​தது. அப்போது வீட்​டின் உரிமை​யாளர் செல்​வம் (48) அங்கிருந்த சுவருக்​கிடையே மறைந்தபடி நின்றிருந்​தார்.

இது குறித்து குழந்​தை​யிடம், ஏன் அழுகிறாய்? என்ன நடந்​தது என்று தாய் விசா​ரித்த போது, வீட்​டின் உரிமை​யாளர் செல்​வம், சிறுமியை மொட்டை மாடி கழி​வறைக்கு அழைத்​துச் சென்று பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டது தெரிய வந்​தது.

இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த சிறுமி​யின் தாய், கத்தி கூச்​சலிட்​ட சத்​தம் கேட்டு வந்த அக்​கம் பக்​கத்​தினர், வீட்​டின் உரிமை​யாளர் செல்​வத்​துக்கு தர்ம அடி கொடுத்​தனர்.

பின்​னர், இதுகுறித்து பல்​லா​வரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீ​ஸார், தாக்​குதலில் இருந்து செல்​வத்தை மீட்​டு, சிகிச்​சைக்​காக தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், விசா​ரணை​யில், வீட்​டின் உரிமை​யாளர் செல்​வம், சிறுமி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டது உறுதி செய்​யப்​பட்​ட​தால், போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, அவரை சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT