க்ரைம்

பூந்தமல்லியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நண்பர் கைது

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: சென்​னை, போரூர் அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்​கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்​பாக நண்​பர் ஒரு​வரை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர். மற்ற 2 பேரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

சென்​னை, புனித தோமையர்​மலை பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் தேர்ச்சி பெறாத​தால் பொது தேர்வு எழுது​வதற்​காக படித்து வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் காலை வீட்​டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேர​மாகி​யும் வீடு திரும்​பாத​தால், பெற்​றோர் அவரை பல்​வேறு இடங்​களில் தேடி அலைந்​தனர்.

இச்​சூழலில், நேற்று முன்​தினம் இரவு மிக​வும் சோர்​வுடன் வீட்​டுக்கு வந்த சிறுமியை பார்த்து பெற்​றோர் அவரிடம் விசா​ரித்​தனர். அப்​போது சிறுமி, தன்னை 3 இளைஞர்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கிய​தாக தெரி​வித்​துள்​ளார்.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த பெற்​றோர் சிறுமியை மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். இதுகுறித்​து, சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், எஸ்​ஆர்​எம்​சி (போரூர்) அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, முதற் கட்ட விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சிறுமி, சமூக வலை​தளம் மூலம் அறி​முக​மான நண்​ப​ரான முகமது ஆரிப் என்ற இளைஞருக்கு உடல்​நிலை சரி​யில்​லாத​தால் அவரை பார்ப்​ப​தற்​காக குன்​றத்​தூர் பகு​திக்கு சென்​றுள்​ளார்.

பிறகு, முகமது ஆரிப், சிறுமியை அவரது வீட்​டுக்கு அழைத்து செல்​வ​தாக கூறி, தன் மோட்​டார் சைக்​கிளில் சென்​னை, போரூர் அருகே உள்ள கெரு​கம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள காலி இடத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார்.

தொடர்ந்​து, தன் நண்​பர்​கள் இரு​வரை வரவழைத்​துள்​ளார் முகமது ஆரிப். பிறகு 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கி​யுள்​ளனர்.

இவ்​வாறு அந்த விசா​ரணை​யில் தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தரப்​பில் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, குன்​றத்​தூர் அருகே உள்ள காலடிபேட்​டையை சேர்ந்த முகமது ஆரிப்பை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர். மற்ற இரு இளைஞர்​களை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமி வசிக்​கும் பகுதி சென்னை பெருநகர காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும், கூட்டு பாலியல் வன்​கொடுமை சம்​பவம் நடந்த பகுதி ஆவடி காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும், குற்ற சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களின் வசிப்​பிடங்​கள் தாம்​பரம் காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும் வரு​கிறது. இதனால், இச்​சம்​பவத்​துக்கு 3 காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​களுக்​கு தொடர்​பு உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT