மாதிரிப் படம்

 
க்ரைம்

திருச்சியில் 1 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 4 பேர்

நகைப் பட்டறை உரிமையாளரை தாக்கி துணிகரம்

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி பெரியகடை வீதி​யில் பட்​டப்​பகலில் நகைப் பட்​டறை உரிமை​யாளர், அவரது உதவி​யாளரைத் தாக்கி ரூ.1.49 கோடி மதிப்​புள்ள ஒரு கிலோ தங்​கத்தை 4 பேர் கும்​பல் கொள்​ளை​யடித்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ளது.

திருச்சி மெயின்​கார்​டு​கேட் பெரிய கடைவீதி பகு​தி​யில் உள்ள பெரிய செட்​டித் தெரு​வைச் சேர்ந்​தவர் உதய்​(36). தங்க நகை மதிப்​பீட்​டாளராக உள்ள இவர், தங்க நகைகளை வாங்கி உருக்கி கட்​டித் தங்​க​மாக விற்​கும் தொழிலும் ஈடு​பட்​டுள்​ளார். இவரது நகைப்​பட்​டறை​யில் நித்​தின் (19) என்​பவர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இவர்​கள் இரு​வரும் மகா​ராஷ்டிர மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள்.

இந்​நிலை​யி்ல், நேற்று பட்​டறைக்கு வந்த 4 பேர், தங்​கக்​கட்டி வாங்​கு​வது போல பேசி நித்​தின், உதய் ஆகியோரை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர். பின்​னர், உதய்யை கழிப்​பறை​யில் வைத்து பூட்​டினர். நித்​தினை நாற்​காலி​யில் உட்​கார வைத்து கை, கால்​களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்​துள்​ள

னர். பின்பு அங்​கிருந்த உருக்கி வைக்​கப்​பட்​டிருந்த ஒரு கிலோ தங்​கக் கட்​டியை கொள்​ளை​யடித்​தனர். மேலும், அங்​கிருந்து சிசிடிவி கேம​ராக்​களை உடைத்து ஹார்டு டிஸ்க்​கை​யும் எடுத்​துக் கொண்டு தப்​பினர்.

அதன்​பின் கழிப்​பறைக் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்த உதய், கோட்டை போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தார். போலீ​ஸார் அங்கு சென்று விசா​ரணை நடத்​தினர். இதில், தங்​கக் கட்​டியை கொள்​ளை​யடித்த 4 பேரும் மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய​வந்​தது. கொள்ளை கும்​பலை போலீஸார் தேடி வரு​கின்​றனர். கொள்​ளை​போன தங்கத்​தின் மதிப்பு ரூ.1.49 கோடி என கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT