குட்கா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: குட்கா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். குட்கா வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் கண்காணிப்பு பணியை அதிகரித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆயிரம் விளக்கு போலீஸார் அதே பகுதி, குலாம் அப்பாஸ் அலிகான் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முகமது அனஸ் (29) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 83 கிலோ குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் ஆட்டோவில் குட்கா கடத்தி விற்பனை செய்த சைதாப்பேட்டை வானியர் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் (59), அதே பகுதி காரணி தோட்டத்தைச் சேர்ந்த மணி (48), அதே பகுதி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 25 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.