க்ரைம்

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, முன்​னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்​டார். சென்​னை, எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்​கு, நேற்று போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர் முனை​யில் பேசிய நபர், “முதல்​வர் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும்'’ எனக் கூறி, இணைப்பை துண்​டித்​தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீ​ஸார், உடனடி​யாக இது தொடர்​பாக உயர் அதி​காரி​களுக்கு தெரி​வித்​தனர்.

          

இதையடுத்​து, தேனாம்​பேட்டை போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் ஆழ்​வார்​பேட்​டை, சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு மற்​றும் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சோதனை நடத்​தினர்.

எனினும், சந்​தேகத்​துக்​கிட​மான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புரளியை கிளப்​பும் வகை​யில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, சைபர் க்ரைம் போலீ​ஸார் உதவி​யுடன் மிரட்​டல் வந்த செல்​போன் எண் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தது விருதுநகர் மாவட்​டத்​தைச் சேர்ந்த முன்​னாள் ராணுவ வீர​ரான பால​முரு​கன் (43) என்​பது தெரிய​வந்​தது.

கடந்த சில வருடங்​களுக்கு முன்​னர் இவரை விட்டு மனைவி பிரிந்து சென்​றுள்​ளார். அந்த விரக்​தி​யில் மது​போதை​யில் இது​போன்று மிரட்​டல் விடுத்​தது தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். பெண்​களுக்கு எதிரான வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ், 2 முறை ஏற்​கெ​னவே பால​முரு​கன் கைது செய்​யப்​பட்​ட​தாக​வும்​ கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT