அஜித் குமார்

 
க்ரைம்

பாபநாசம் அருகே மகளை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை கொன்ற தந்தை

செய்திப்பிரிவு

கும்பகோணம்: ​பாபநாசம் அருகே காதல் விவ​காரத்​தில் பள்ளி ஆசிரியையை வழிமறித்​துக் கொன்ற வழக்​கில் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் வந்த இளைஞரை, பழிக்​குப் பழி​யாக வெட்​டிக் கொலை செய்த அப்​பெண்​ணின் தந்தை உட்பட 4 பேர் போலீ​ஸில் சரணடைந்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பாப​நாசம் வட்​டம் பிராந்​தையைச் சேர்ந்​தவர் மு.புண்​ணிய மூர்த்தி. இவரது மகள் காவியா (26). ஆலங்​குடி அரசு ஆதி​தி​ரா​விடர் நல தொடக்​கப் பள்​ளி​யில் தற்​காலிக ஆசிரிய​ராக பணி​யாற்றி வந்​தார். இவரும், மேல களக்​குடியைச் சேர்ந்த அஜித் குமாரும் பல ஆண்​டு​களாக காதலித்து வந்​தனர்.

காவி​யா​வின் பெற்​றோர் இவர்​களது திரு​மணத்​துக்கு சம்​ம​திக்​க​வில்​லை. மேலும், வேறொரு​வருடன் காவி​யா​வுக்கு நிச்​சய​தார்த்​தம் செய்​து​வைத்​தனர். இதுகுறித்து அஜித்​கு​மாருக்கு தகவல் தெரி​வித்​ததுடன், நிச்​சய​தார்த்த புகைப்​படத்​தை​யும் காவியா அனுப்​பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்​ கு​மார், கடந்​தாண்டு நவ.27-ம் தேதி காவி​யா​வை, வழிமறித்து வெட்​டிக் கொலை செய்​தார்.

இதுகுறித்து அம்​மாப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்து அஜித்​கு​மாரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். பின்​னர், கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் அவர் வெளியே வந்​தார். இதையறிந்த புண்​ணி​யமூர்த்​தி, அஜித்​கு​மாரை பழிக்​குப் பழி​யாக கொலை செய்ய திட்​ட​மிட்​டார்.

இதன்​ தொடர்ச்​சி​யாக உறவின​ரான ஆலங்​குடி கன்​னித்​தோப்​பைச் சேர்ந்த லோகேஷ், ராமலிங்​கம், புல​வர்​நத்​தம் கருப்​பையா ஆகியோருடன் நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் அஜித்​கு​மார் வீட்​டுக்​குச் சென்​று, அங்கு தூங்​கிக் கொண்​டிருந்த அஜித்​கு​மாரை வெட்​டிக் கொலை செய்​து ​விட்​டு, அம்​மாபேட்டை காவல் நிலை​யத்​தில் சரணடைந்​தனர்.

இதுகுறித்து மெலட்​டூர் போலீ​ஸாருக்கு தகவல் அளிக்​கப்​பட்டு அவர்​கள், மேல களக்​குடி சென்று அஜித்​கு​மாரின் உடலை கைப்​பற்றி பரிசோதனைக்​காக தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லுாரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், 4 பேரை​யும் கைது செய்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT