க்ரைம்

மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழப்பு: தந்தை தற்கொலை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​ராமேசுவரம் அரு​கே​யுள்ள மண்​டபம் மீனவர் குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர் களஞ்​சி​யம் (28). இவர் நேற்று முன்​தினம் இரவு வீட்​டில் மின் மோட்​டாரை சரி செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டார். அப்​போது மின்​சா​ரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இந்​நிலை​யில், மகன் இறந்த துக்​கம் தாளாத அவரது தந்தை சேகர் (58), வீட்​டில் நேற்று அதி​காலை தூக்​கிட்​டுத் தற்கொலை செய்து கொண்​டார்.

இதையடுத்​து, இரு​வரது உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்​காக ராம​நாத​புரம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக மண்​டபம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT