க்ரைம்

பணியிட உத்தரவு வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மீண்டும் பணி​யில் சேர பணி​யிட உத்​தரவு வழங்​கு​வதற்​காக, ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்​கிய​தாக, மின்​வாரிய அலு​வலக உதவி​யாளர் ஒரு​வரை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழ்​நாடு மின்​வாரிய (பெசன்ட்​நகர்) உதவி பொறி​யாளர் பாலசுப்​பிரமணி​யன் என்​பவர், கடந்த 2023 செப்​.23 அன்று ரூ.10 ஆயிரம் லஞ்​சம் பெற்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பான வழக்​கு, விசா​ரணை​யில் இருந்து வரு​கிறது. இதற்​கிடை​யில், அவருக்கு விதிக்​கப்​பட்ட பணி​யிடை நீக்க (சஸ்​பெண்ட்) உத்​தரவை அடை​யாறு மேற்​பார்வை பொறி​யாளர் கடந்த 2026 ஜூன் 12-ம் தேதி​யன்று ரத்து செய்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், மீண்​டும் பணி​யில் சேருவதற்​கான பணி​யிட உத்​தர​வை, சென்னை அண்ணா சாலை​யில் உள்ள தலைமை பொறி​யாளர் (பணி​யாளர் பிரிவு) அலு​வல​கம் மூலம் வழங்க வேண்​டி​யிருந்​தது.

இந்​நிலை​யில், பணி​யிட உத்​தரவு பெற்​றுத் தரு​வதற்​காக, தமிழ்​நாடு மின்​வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரி​வில் உதவி​யாள​ராக பணி​யாற்​றும் பாலாஜி என்​பவர், பாலசுப்​பிரமணி​யனிடம் ரூ.1.50 லட்​சம் லஞ்​சம் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது. பின்​னர், பேச்​சு​வார்த்​தை​யில் அந்த தொகை ரூ.1.30 லட்​ச​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், முதற்​கட்​ட​மாக ரூ.50 ஆயிரம் லஞ்​சப் பணத்தை நேற்று வழங்​கு​மாறு பாலாஜி கேட்​ட​தாக தெரி​கிறது. இதுகுறித்​து, பாலசுப்​பிரமணி​யன் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இதையடுத்​து, அதி​காரி​கள் ஏற்​பாடு செய்த சோதனை நடவடிக்​கை​யின் போது, சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள தமிழ்​நாடு மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் பாலாஜி, புகார்​தா​ரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்​சப் பணத்தை நேற்று பெற்​றுள்​ளார்.

அப்​போது, மறைந்​திருந்த லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார், அவரை சுற்றி வளைத்து கைது செய்​தனர். அவரிடம் தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT