க்ரைம்

கோவையில் ‘சைபர்’ குற்றங்கள் அதிகரிப்பு: காவல் துறையின் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

டி.ஜி.ரகுபதி

கோவை: ‘சைபர்’ குற்றங்களின் ‘ஹாட்ஸ் பாட்’ ஆக மாறும் கோவை​யில், தடுப்பு நடவடிக்​கை​களை போலீஸார் தீவிரப்​படுத்தி​யுள்​ளனர்.

அதி​கரித்​து​வ​ரும் தொழில்​நுட்ப வசதி​களை பயன்​படுத்தி மர்ம நபர்​கள் பல்​வேறு சைபர் கிரைம் மோசடிகளில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர். ஒரு சில வழக்​கு​களை தவிர, பெரும்​பாலான பண மோசடி தொடர்​பான சைபர் கிரைம் வழக்​கு​களில் பிர​தான குற்​ற​வாளி​கள் யாரும் இது​வரை கைது செய்​யப்​பட​வில்​லை. அவர்​களு​டன் தொடர்​பில் இருந்த நபர்​கள் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டு்ள்​ளனர்.

திட்​டப் பணி​கள் தொடர்​பாக ஒவ்​வொரு மாத​மும் நடத்​தப்​படும் மத்​திய அரசின் ‘பிரக​தி’ கூட்​டத்​தில், சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க தேவை​யான தடுப்பு நடவடிக்​கை​களை தீவிரப்​படுத்த அறி​வுறுத்​தப்​பட்டுள்​ளது. அதே​போல, தேசிய அளவில் சைபர் குற்​றங்​கள் அதி​கம் நடை​பெறும் மாநிலங்​கள், மாவட்டங்கள் உள்​ளிட்​டவை குறித்த ‘ஹாட்​ஸ்​பாட்’ பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு தடுப்பு நடவடிக்​கை​கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்​பாக கோவை சைபர் கிரைம் போலீ​ஸார் கூறும்​போது, ‘‘சைபர் குற்​றங்​கள் அதிகம் நடக்​கும் மாநிலங்​களின் பட்​டியலில் தமிழ்​நாடு 7-வது இடத்​தில் உள்​ளது. மேற்கு​வங்​கம், உத்தரபிரதேசம், மகா​ராஷ்டிரா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்​ளன. தமி​ழ​கத்​தில் சைபர்​கிரைம் அதி​கம் நடக்கும் ஹாட்​ஸ்​பாட் பட்டியலில் கோவை​யும் உள்​ளது. சைபர் கிரைம் தொடர்​பான பணப் பரி​மாற்​றங்​கள் அதி​கம் நடை​பெறும் மாவட்டமாக ராம​நாத​புரம் மாவட்​டம் உள்​ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகு​தி​களில் சைபர் கிரைம் மோசடி கும்​பலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தொடர்ந்து புகார்​களை அளித்து வரு​கின்​ற​னர். மோசடியில் தொடர்​புடைய​வர்​கள் கைது செய்​யப்​படு​கின்ற​னர்.

நேரடி​யாக​வும், சமூகவலை​தளங்​கள் மூலமும் மக்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படு​கிறது. கோவை மாநகர சைபர் கிரைம் பிரி​வில் நடப்​பாண்டு சைபர் மோசடிகள் தொடர்​பாக 7 ஆயிரம் பேர் புகார் அளித்​துள்​ளனர். ரூ.45 கோடி வரை மோசடி செய்யப்​பட்​டுள்​ளது. அதில், ரூ.2.50 கோடி வரை திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது. மேலும் ரூ.2 கோடியை திரும்​பப்​ பெற முயற்​சி நடக்​கிறது’’ என்​ற​னர்​.

SCROLL FOR NEXT