க்ரைம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விசிக தொழிற்சங்க நிர்வாகி மீது வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: பாலியல் குற்​றச்​சாட்​டில் விசிக தொழிற்​சங்க நிர்​வாகி மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். சென்னை புது வண்​ணாரப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் நன்​மாறன் (63).

சென்னை துறை​முகத்​தில் ஊழிய​ராகப் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற இவர், விசிக​வின் தொழிலா​ளர் விடு​தலை முன்​னணி தொழிற்​சங்​கத்​தின் பொதுச்​செயல​ராக உள்​ளார்.

          

இவர், அந்​தப் பகு​தி​யைச் சேர்ந்த சிலருக்கு வட்​டிக்கு கடன் கொடுத்​துள்​ளார். இவ்​வாறு, தன்​னிடம் வட்​டிக் கடன் பெற்ற பெண் ஒரு​வருக்கு சில மாதங்​களாக பாலியல் தொல்லை கொடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால் பாதிக்​கப்​பட்ட அந்த பெண், அண்​மை​யில் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கு​மாறு வண்​ணாரப்​பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்.

அதன்​படி, போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதையடுத்​து, நன்​மாறன் மீது பெண் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 3 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT