ஆகாஷ், ஆதேஷ், சபீனா பார்வா

 
க்ரைம்

தனியார் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் திருட்டு: மும்பை சகோதரர்கள், சத்தீஸ்கர் பெண் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொளத்​தூர் பூம்​பு​கார் நகர், 12-வது தெரு​வில் வசித்து வருபவர் வைதேகி (46). கிண்​டி​யில் உள்ள தனி​யார் நிறு​வனம்

ஒன்​றில் மனிதவள அதி​காரி​யாக பணி​யாற்​றுகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வழக்​கம்​போல பணிக்​குச் சென்று மாலை​யில் திரும்பி வந்​த​போது, வீட்​டின் கதவு திறக்​கப்​பட்டு உள்ளே இருந்த நகை, பணம் மற்​றும் விலை உயர்ந்த பொருட்​கள் திருடப்​பட்​டிருந்​தன.

இது தொடர்​பாக அவர் கொளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​து மும்​பையைச் சேர்ந்த ஆகாஷ் கங்​கா​ராம் சாவன் (30), அவரது சகோ​தரர் ஆதேஷ் கங்​கா​ராம் சாவன் (27) மற்​றும் சத்​தீஸ்​கர்மாநிலம் ஜஸ்​பூரைச் சேர்ந்த சபினா பார்வா (32) ஆகியோரை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட ஆகாஷ் கங்​கா​ராம் சாவன், வைதேகி​யின் மகள் ராயப்​பேட்​டை​யில் நடத்​திவரும் உயர்தர காபி கடை​யில் வேலை செய்​துள்​ளார். அப்​போது வைதேகி வீட்​டின் ஒரு சாவியை திருடி எடுத்து வைத்​துக்​கொண்​டு, அவரது தம்பி ஆதேஷ் கங்​கா​ராம் சாவன், தோழி சபினா பார்வா ஆகியோருடன் சேர்ந்த திருட திட்டமிட்டார். அதன்படி 3 பேரும் சம்​பவத்​தன்று சென்னை வந்து வைதேகி வீட்​டில் திருடியது தெரிய​வந்​தது. இந்த வழக்​கில் தொர்​புடைய மேலும்​ ஒரு​வரை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT