கோப்புப் படம்
சென்னை: கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.14.25 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கிய விவகாரத்தில், ஊராட்சித் தலைவர் ஜெகதீஸ்வரி உட்பட சிலர் மீதுசென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க கட்டுமான நிறுவனங்களிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்கேட்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 11-ம்தேதி ஊராட்சி அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது தலைவர் அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
அந்த பணம் தொடர்பாக தலைவர் ஜெகதீஸ்வரி மற்றும் அங்கிருந்தவர்களிடம் விசாரணைநடத்தப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவல்களில் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த ரூ.14.25 லட்சத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஊராட்சித் தலைவர் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவர் லைலா மற்றும் உறுப்பினர்களின் வீடுகள்உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,ஊராட்சி தலைவர் உட்பட சிலர்மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாககாஞ்சிபுரம் ஆட்சியர் தி.சினேகா கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆரம்ப கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஆட்சியர் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.