சசிகலா |கோப்புப் படம்

 
க்ரைம்

வாணியம்பாடி அருகே கல்குவாரியில் பெண் உடல் மீட்பு: கணவர், மருமகன் கைது

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: அரூரில் கடந்த 3 நாட்​களுக்கு முன்பு காணா​மல் போன பெண் வாணியம்பாடி அருகே கல்​ கு​வாரி குட்​டையில் நேற்று உயி​ரிழந்த நிலை​யில் மீட்​கப்​பட்​டார்.

திருப்​பத்​தூர் மாவட்​டம் வாணி​யம்​பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்​கு, பார​திநகர் பகு​தி​யில் செயல்​ப​டாத கல்​கு​வாரி​யில் நேற்றுகாலை துர்​நாற்​றம் வீசி​யது.

இதையடுத்​து, அப்​பகுதி மக்​கள் அங்கு சென்று பார்த்​த​போது கல்​கு​வாரி குட்​டை​யில் பெண் உயி​ரிழந்​ததை கண்டு அதிர்ச்​சி​யடைந்​தனர். உடனடி​யாக வாணி​யம்​பாடி கிரா​மிய காவல் துறை​யினருக்கு அப்​பகுதி மக்​கள் தகவல் தெரி​வித்​தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிராமிய போலீ​ஸார், பெண்​ணின் உடலை மீட்டு பிரேதப் பரி​சோதனைக்​காக வேலூர் அடுக்​கம்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய முதற்​கட்ட விசா​ரணை​யில், உயி​ரிழந்​தவர் அரூர் அடுத்த பாப்​பிரெட்​டிப்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த சசிகலா (52) என்​பதும், இவர் கடந்த 3 நாட்​களுக்கு முன்பு 24 பவுன் நகை​கள் மற்​றும் ரூ.25 ஆயிரம் பணத்​துடன் காணா​மல் போன​தாக, அவரது கணவர் அசோகன் என்​பவர் பாப்​பிரெட்​டிப்​பட்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​திருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

மேலும், பாப்​பிரெட்​டிப்​பட்டி போலீ​ஸார் சசிகலா காணா​மல் போனது தொடர்​பாக 4 பேரிடம் விசா​ரணை மேற்​கொண்டு வந்த நிலை​யில், சொத்து பிரச்​சினை காரண​மாக அவரது கணவர் அசோகன் மற்​றும் மரு​மகன் ஆகி​யோர் ஒன்று சேர்ந்து சசிகலாவை கொலை செய்து அவரது உடலை வாணி​யம்​பாடி பகு​திக்கு கொண்டு வந்து செயல்​ப​டாத கல்​கு​வாரி​யில் வீசீ​விட்டு சென்​றது தெரிய​வந்​தது.

இது குறித்து பாப்​பிரெட்​டிப்​பட்டி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து சசிக​வா​வின் கணவர் அசோகன் மற்​றும் மரு​மகன் அஸ்​லாம் ஆகிய இரு​வரை​யும் கைது செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT