கொலை நடந்த பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

 
க்ரைம்

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம்: கைதானவரிடம் சம்பவ இடத்தில் வைத்து விசாரணை

விரைவில் தண்டனை பெற்றுத் தர தென்மண்டல ஐஜி உறுதி

செய்திப்பிரிவு

கோவில்பட்டி / மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் அருகே வேடநத்​தத்​தில் கொலை செய்​யப்பட்ட மாணவியின் உடலை 11 நாட்​களுக்கு பின்​னர் உறவினர்​கள் நேற்று பெற்​றுதகனம் செய்​தனர்.

இதில் துரிதமாக வழக்கை நடத்தி கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என தென்மண்டல ஐஜி உறுதி தெரிவித்துள்ளார்.

வேடநத்​தத்​தைச் சேர்ந்த தொழிலாளி சுப்​பு​ராஜ் என்​பவரின், 17 வயது மகள் கடந்த 10-ம் தேதி இரவு கொலை செய்​யப்​பட்​டார்.

அவரது கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்​து உறவினர்​கள், கிராம மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

          

இதற்​கிடையே, 10-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள் அமைத்து போலீ​ஸார் பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை மேற்​கொண்​டனர். இவ்​விவ​காரத்​தில் ராம​நாத​புரம் மாவட்​டம், சாயல்​குடி மாரி​யம்​மன் கோவில் தெரு​வைச்சேர்ந்த முனிய​சாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீசுவரனை (37) நேற்று முன்​தினம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதையடுத்​து, மாணவியின் உறவினர்​கள் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனைக்குச் சென்று மாணவியின் உடலை நேற்று பெற்​றுக்​கொண்​டனர். அங்​கு, மாணவியின் உடலுக்கு அமைச்​சர் பி.கீ​தாஜீவன், எம்​எல்​ஏக்​கள் ஜீ.​வி.​மார்க்​கண்​டேயன், கடம்​பூர் செ.​ராஜூ, பாஜக மாவட்​டத் தலை​வர் சரவண கிருஷ்ணன் மற்​றும் கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்னர், மயானத்துக்கு எடுத்து வந்து மாணவியின் உடல் தகனம் செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட தர்ம முனீஸ்​வரனை நேற்று சம்பவ இடத்துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர். கொலை செய்​தது எப்​படி என விசா​ரித்தனர். பின்​னர், தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

அவரை 14 நாட்கள் காவலில் வைக்​க​வும், ஏப்​.2-ம் தேதி ஆஜர்​படுத்​த​வும் நீதிபதி பிரீத்தா உத்​தர​விட்​டார். இதையடுத்​து, பலத்த பாது​காப்​புடன் பாளை​யங்​கோட்டை மத்​திய அவர் அடைக்கப்பட்டார். கைதான தர்ம முனீஸ்​வரன் ஏற்​கெனவே மூதாட்டி கொலை வழக்​கில் ஆயுள்​தண்​டனை பெற்​றவர்.

உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த டிச.18-ம் தேதி ஜாமீன் பெற்​றுள்​ளார். நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தூத்​துக்​குடி மகிளா நீதி​மன்​றத்​தில் தின​மும் கையெழுத்​திட்டு வந்​துள்​ளார்.

இதற்​காக அவர் தின​மும் சாயல்​குடி​யில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் வேடநத்​தம், குறுக்​குச்​சாலை வழி​யாக தூத்​துக்​குடிக்கு வந்து சென்​றுள்​ளார்.

செல​வுக்கு பணம் தேவைப்பட்​ட​தால் மோட்​டார் சைக்​கிளில் வரும்​போது அப்பகுதியை நோட்​ட​மிட்டுள்​ளார். அப்​போது, இரவு நேரங்​களில் வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் இயற்கை உபாதை கழிக்க காட்​டுப்​பகு​திக்குச் செல்​வதை கவனித்​துள்​ளார்.

10-ம் தேதி இரவு அப்​படி அவர் காட்​டுப்​பகு​தி​யில் நோட்​ட​மிட்​ட​போது, மாணவி அவரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நகைகள் எது​வுமில்​லாததை அறிந்து பாலியல் வன்​கொடுமை செய்​து, கொலை செய்​து​விட்​டு தப்​பி​விட்​டதாக போலீ​ஸார் கூறினர்.

துரித நடவடிக்கை

இதனிடையே தென்​மண்டல ஐஜி விஜயேந்​திர பிதாரி கூறும்போது, இவ்​வழக்​கில் தொடக்​கத்​தில் எந்​தத் துப்​பும் கிடைக்​காத நிலை​யில், மிக நுணுக்​க​மாக அறிவியல்​ பூர்​வ​மாக விசாரித்து கொலை​யாளியை கண்​டறிந்​தோம்.

மற்றொரு கொலை வழக்கில் ஜாமீனில் வந்த சூழலில்தான் மாணவியை கொலை செய்திருக்​கிறார். இவ்​வழக்​கில், விசா​ரணையை துரிதப்​படுத்தி நீதி​மன்​றம் மூலம் உரிய தண்​டனை பெற்​றுத் தரப்​படும் என்​றார்.

SCROLL FOR NEXT