க்ரைம்

மனைவியை கொலை செய்வேன் என வானத்தை நோக்கி சுட்டு மிரட்டிய ராணுவ வீரர்: ஏர்கன், 180 தோட்டாக்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: மனை​வியை கொலை செய்து விடு​வேன் எனக் கூறி, துப்​பாக்​கி​யால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்​டிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

அம்​பத்​தூர் அருகே உள்ள அயப்​பாக்​கம் கணேஷ் நகர் 4-வது தெருவை சேர்ந்​தவர் ஜான்​பாஸ்கா (59). இந்​திய ராணுவத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி அனு​ரா​தாவுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக, கடந்த 4 ஆண்​டு​களாக தனி​யாக வசித்துவரு​வ​தாக கூறப்​படு​கிறது.

அனு​ராதா தனது குழந்​தைகளு​டன் அரும்​பாக்​கம் என்​.எஸ்​.கே. நகரில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், ஜான்​பாஸ்கா நேற்​று ​முன்​தினம் இரவு மனை​வி​யின் வீட்​டுக்கு சென்​றுள்​ளார்.

அப்​போது, அங்​கிருந்த தனது மகள் கரீ​னா​விடம், தன்​னிடம் இருந்த துப்​பாக்​கியை காட்​டி, அனு​ரா​தாவை கொலை செய்​து​விட்​டு, தானும் தற்​கொலை செய்து கொள்​வேன் என மிரட்​டிய​தாக கூறப்​படு​கிறது. மேலும், அங்​கிருந்​த​படியே வானத்தை நோக்கி ஒரு முறை சுட்​டு​விட்டு சென்​ற​தாக தெரி​கிறது.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த கரீ​னா, தனது தாயிடம் தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து அனு​ராதா அமைந்​தகரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீ​ஸார், ஜான்​பாஸ்​காவை பிடித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மேலும், அவரிடம் இருந்த ஏர்​கன் வகை துப்​பாக்கி மற்​றும் 180 டம்மி தோட்​டாக்​களை பறி​முதல் செய்​தனர். சம்​பவம் குறித்து தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT