சிவகங்கை: சிவகங்கை அருகே மாணவி களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
மேலூர் அருகேயுள்ள கீழையூரைச் சேர்ந்தவர் விநாயக சவுத்திரி (44). இவர் சிவகங்கை அருகேயுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துக் கண்ணன் விசாரணை நடத்தினார். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. இது குறித்து முத்துக் கண்ணன் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து ஆசிரியர் விநாயக சவுத்திரியை கைது செய்தனர்.