க்ரைம்

புதுக்கோட்டை | பாலியல் வன்கொடுமை: கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2022-ல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.5 லட்சம் அபராதம், அத்துமீறி வீடு புகுந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், ஆபாசமாக பேசிய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். வழக்கில் அரசு வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார்.

SCROLL FOR NEXT