க்ரைம்

தி.மலை | ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் வேலூர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

தி.மலை: திருவண்ணாமலை, போளூர்,கலசப்பாக்கத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில், ஹரியாணா மாநில கும்பல்பிப்.12-ல் ரூ.73 லட்சத்தை கொள்ளை அடித்தது.

இதில், ஹரியாணா மேவாத் பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப்(35), ஆசாத்(36) ஆகியோரை பிப்.16-ம் தேதியும், கர்நாடாக மாநிலம் கோலார் பகுதியில் வசிக்கும் குத்ரத் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூர் அப்சர் ஹுசேன்(26) ஆகியோர் கடந்த பிப்.21-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கோலாரை சேர்ந்த நிஜாமுதீன்(37) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவரை, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, மீண்டும் நேற்று முன்தினம் இரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT