ஹரிதா ஷாஹினா 
க்ரைம்

கூடுவாஞ்சேரி | முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலையில் தம்பி மகள் கைது

செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரி: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி மகள் கைது செய்யப்பட்டார். கடந்த ஜன.22-ல் முன்னாள் எம்.பி. மஸ்தான் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்தபோது உயிரிழந்தார். இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மஸ்தானின் கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா, தமீம் சுல்தான் நசீர், தவுபிக் அகமது மற்றும்மஸ்தானின் சகோதரர் ஆதாம் பாஷா ஆகிய 6 பேரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த கொலையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என மஸ்தானின் தம்பியானஆதாம் பாஷாவை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

இதில் மஸ்தானின் சகோதரர்ஆதாம் பாஷாவின் மகளான ஹரிதா ஷாஹினா (26) இந்தக்கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். மஸ்தான்கொலை வழக்கில் இதுவரை அவரது தம்பி, தம்பியின் மகள், தம்பியின் மருமகன் உட்பட 7 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT