க்ரைம்

மதுரை | போலி பாஸ்போர்ட் வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கு சிறை

செய்திப்பிரிவு

மதுரை: ​போலி பாஸ்போர்ட் வழக்​கில் காவல் ஆய்​வாளர் உட்பட 9 பேருக்கு சிறை தண்​டனை வழங்​கப்​பட்​டது. 2009-ல் மதுரை​யில் பலருக்கு போலி பாஸ்போர்ட் வழங்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இது தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில், 22 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்​கப்​பட்​டது உறு​தி​யானது.

இதையடுத்​து, மதுரை மண்டல அலு​வல​கத்​தில் பணிபுரிந்த உதவி பாஸ்போர்ட் அதி​காரி கீதா​பாய், உதவி​யாளர் அன்​பழகன், திண்​டுக்​கல் பேகம்​பூர் தபால்​காரர் செல்​வதுரை, திண்​டுக்​கல் தெற்கு டவுன் காவல் ஆய்​வாளர் தங்​கவேலு, திண்​டுக்​கல் காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கப் பணி​யாளர் சுரேஷ்​பாபு, முகவர்​கள் இப்​ராஹிம் மீரான், பக்​ருதீன், ஷாஜ​கான், சுனிதா பானு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், குற்​றம் சுமத்​தப்​பட்ட முகவர்​கள் பக்​ருதீன், ஷாஜ​கான் மற்றும் செல்​வதுரை, சுரேஷ்​பாபு ஆகியோ​ருக்கு 4 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.80 ஆயிரம் அபராத​மும், உதவி பாஸ்போர்ட் அதி​காரி கீதா​பாய், இப்​ராகிம் மீரான், சுனிதா பானு ஆகியோ​ருக்கு 3 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.70 ஆயிரம் அபராத​மும், அன்​பழகன், காவல் ஆய்​வாளர் தங்​கவேலு ஆகியோ​ருக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.40 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி சண்​முகவேல் நேற்று தீர்ப்​பளித்​தார்.

SCROLL FOR NEXT