க்ரைம்

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சக மாணவர்கள் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்​துக்​குடி அருகே அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில், உடன் படிக்​கும் மாணவரை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாக 8-ம் வகுப்பு மாணவர்​கள் 5 பேர் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டனர்.

அரசு மேல்​நிலைப் பள்​ளியில் 8-ம் வகுப்பு படிக்​கும் மாணவர் ஒரு​வரை, உடன் படிக்​கும் சக மாணவர்​கள் பாலியல் ரீதி​யாக தொடர்ந்து துன்​புறுத்தி வந்​துள்​ளனர். இதுகுறித்​து, வெளியே கூறி​னால் மேலும் துன்​புறுத்​து​வோம் என மிரட்​டி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், கடந்த மாதம் 18-ம் தேதி மாலை பள்​ளி​யில் மீண்​டும் அந்த மாணவரை சக மாணவர்​கள் துன்​புறுத்​தி​யுள்​ளனர். இதில், அந்த மாணவர் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளார். இதையறிந்த அப்​பள்ளி ஆசிரியர் ஒரு​வர், பாதிக்​கப்​பட்ட மாணவரின் பெற்​றோரிடம் தெரிவித்துள்​ளார்.

இதுகுறித்து விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்கப்பட்டது. போலீ​ஸ் விசா​ரணையில், மாணவரை கடந்த ஆண்டு முதல் சம்​பந்​தப்​பட்ட மாணவர்​கள் துன்​புறுத்தி வந்​துள்​ளனர் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பி.என்​.எஸ். மற்​றும் போக்சோ சட்​டத்​தின்​கீழ், 6 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்​து, மாணவரை துன்​புறுத்​தி​ய​தாக 8-ம் வகுப்பு படிக்​கும், 14 வயது மாணவர்​கள் 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர், அவர்​களை தூத்​துக்​குடி​யில் உள்ள சிறார் நீதிக்​குழு​மத்​தில் ஆஜர்​படுத்​தி நேற்று முன்​தினம் இரவு திருநெல்​வேலி​யில் உள்ள சிறு​வர் கூர்​நோக்கு இல்​லத்​தில் அடைத்​தனர். மேலும், 3 மாணவர்​களிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்​து, தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் கூறியதாவது: இப்​பள்​ளி​யில் மாணவனை, சக மாணவர்​கள் துன்​புறுத்​திய சம்​பவத்தை பள்ளி ஆசிரியர்​கள்​தான் முதலில் கண்​டு​பிடித்​துள்​ளனர். இருதரப்பு மாணவர்​களின் பெற்​றோரை​யும் வரவழைத்து கவுன்​சிலிங் கொடுத்​துள்​ளனர்.

மேலும், இது​போன்ற சம்​பவங்​கள் நடக்​காமல் தடுப்​ப​தற்​காக, குழந்​தைகள் நலக்​குழு மூலம் பள்​ளி​யில் உள்ள அனைத்து மாணவர்​களுக்​கும் கவுன்​சிலிங் கொடுப்​ப​தற்​கான நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக, காவல் துறை சார்​பில் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த விசா​ரணை அறிக்கை அடிப்​படை​யில் தேவைப்​பட்​டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT