க்ரைம்

சென்னையில் 476 லாட்ஜ்களில் போலீஸ் சோதனை; சிறப்பு வாகனத் தணிக்கையில் 77 வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை 476 லாட்ஜ்களில் காவல் துறையினர் சோதனை செய்தனர். மேலும், சிறப்புச் சோதனையில் 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 12) சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், நேற்று இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 5,270 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில், மது போதை மற்றம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT