முனிராஜ். 
க்ரைம்

பரதராமி அருகே சொத்து தகராறில் தாய், தங்கையை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்: வேலூர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

வேலூர்: பரதராமி அருகே சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை கட்டையால் அடித்துக் கொலை செய்த வருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக் கப்பட்டது.

வேலூர் மாவட்டம் பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (52). இவரது தாயார் இந்திராணி (70). இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை திருமணம் ஆகாமல் தன்னுடன் வசித்து வந்த மகள் சின்னம்மாள் (42) என்பவரது பெயரில் எழுதி வைத்துள்ளார். இது, முனிராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இந்திராணியிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10-06-2020-ல் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தாய் இந்தி ராணியை கட்டையால் முனிராஜ் தாக்கியுள்ளார். அப்போது, தடுக்க வந்த சின்னம்மாள் மற்றும் உறவினர் மகன் தினேஷ் என்பவரையும் முனிராஜ் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங் களுடன் மீட்கப்பட்ட சின்னம்மாள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பரதராமி காவல்நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து முனிராஜை கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில், முனிராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, முனிராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆஜராகினார்.

SCROLL FOR NEXT