விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்றம் கொடுத்த 7 நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று (ஏப்ரல் 4) ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
முன்னதாக, உடல்நிலை சரியில்லாததால் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோருக்கு கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை ஹரிஹரன் உள்ளிட்ட மூவருக்கும் மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. அதையடுத்து ஹரிஹரனுக்கு மட்டும் தலையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதற்காக அவரை சிபிசிஐடி போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்தபோது ஹரிஹரனுக்கு விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும், இதற்காக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை முடிந்து ஹரிகரன் அழைத்து வரப்பட் நிலையில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பது குறுப்பிடத்தக்கது..