க்ரைம்

ஆத்தூர் அரசு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிளஸ் 1 மாணவர் உடல் மீட்பு: போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

சேலம்: ஆத்தூர் அரசு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறை செங்காடுபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் தினேஷ் (16). இவர் ஆத்தூர் அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறு விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற தினேஷ் நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு திரும்பிய நிலையில், இரவு விடுதி வளாகத்தின் பின்புறப் பகுதியில் உள்ள மரத்தில் தினேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஆத்தூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், கோட்டாட்சியர் சரண்யாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

          
SCROLL FOR NEXT