க்ரைம்

கம்பம்: சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது பாய்ந்தது போக்ஸோ

செய்திப்பிரிவு

கம்பம் கேகே.பட்டி சாலையைச் சேர்ந்தவர் சதீஸ்(30). கூலித் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதில் கர்ப்பமான சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 4 மாத சிசு வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து இது குறித்து குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஸ் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT