க்ரைம்

வலைதளத்தில் சிறுமியின் படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: சென்னை இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

சென்னை சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசித்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண வர் பிரிந்து சென்றதால், மகளுடன் தாய் புதுச்சேரியில் குடியேறினார். மகள் 9-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

சென்னையில் பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்த 19 வயதுடையவருடன் பழகி வந்துள்ளார். புதுச்சேரி வந்த பிறகு, இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி, அந்த இளைஞருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்,தன்னுடன் சிறுமி பழகியபோதுஎடுத்துக் கொண்ட புகைப்படங் களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் புதுச்சேரி போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து, இளைஞரை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT