க்ரைம்

சங்கரன்கோவில் அருகே விவசாயிக்கு வெட்டு: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருக்கும், இவரது அண்ணன் வெள்ளைச்சாமி என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், பெருமாள்சாமி தனது குடும்பத்தினருடன் வயலில் சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, வெள்ளைச்சாமி, அவரது மகன்கள் அஜித்குமார், கோபிநாத் ஆகியோர் அங்கு வந்து, பெருமாள்சாமியிடம் தகராறு செய்தனர். அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் அடைந்த பெருமாள்சாமி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வெள்ளைச்சாமி, அஜித்குமார், கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT