க்ரைம்

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை: என்.ஆர். காங். பிரமுகர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்​சாலை நடத்​தி, பல கோடி மோசடி நடந்​துள்​ளது தொடர்​பாக, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ராஜா, விவேக் உட்பட 16 பேர் கைது செய்​யப்​பட்​டிருந்​தனர்.

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசா​ரணைக்கு மாற்றி துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பரிந்​துரை செய்​துள்​ளார்.

இந்​நிலை​யில், அரி​யாங்​குப்​பத்​தைச் சேர்ந்த என்​.ஆர்​. காங்​கிரஸ் பிரமுகர் மணி​கண்​டன், பூத்​துறை ஆனந்​த​ராஜ், கோட்​டக்​குப்​பம் குமர​வேலு, முருங்​கப்​பாக்​கம் செல்​வ​ராஜ் ஆகியோரை சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் கைது செய்​தனர்.

நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட 4 பேரும் காலாப்​பட்டு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இதில், என்​.ஆர். காங்​. பிர​முகர் மணி​கண்​டன் போலி மருந்து தொழிற்​லை​யின் பங்​கு​தா​ர​ராக செயல்​பட்டு வந்​துள்​ளார்.

முருங்​கப்​பாக்​கம் செல்​வ​ராஜ் கணக்​காள​ராக​வும், ஆனந்​த​ராஜ், குமர​வேலு போலி மருந்​துகளுக்கு லேபிள் ஒட்​டும் பணி​யிலும் ஈடு​பட்டு வந்ததாக போலீஸார் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT