க்ரைம்

கே.கே.நகரில் பைக் ரேஸ்: அதிவேகமாக ஓட்டி வீலிங் செய்த 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கே.கே. நகரில் இருசக்கர வாக​னங்​களை அதிவேக​மாக ஓட்​டி, வீலிங் செய்​த​தாக இளைஞர்கள் 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்னை கே.கே. நகர் 100 அடி சாலை​யில் லட்​சுமண் ஸ்ருதி சிக்​னல் அருகே நேற்று முன்​தினம் அதி​காலை போலீ​ஸார் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது 2 இருசக்கர வாக​னங்​கள் அதிவேக​மாக​வும், தாறு​மாறாக​வும் சென்று கொண்​டிருந்​தன. அந்த வாக​னங்​கள் ஒன்​றுக்​கொன்று போட்​டி​போட்​டபடி சென்​றன.

மேலும், அதிக சத்​தம் எழுப்​பியபடி வாக​னங்​களை ஆக்​ரோஷ​மாக இயக்​கிய இளைஞர்​கள், ஒன்​றை யொன்று உரசி​யபடி முந்​திச் சென்​றனர். மேலும், சாலை​யில் இடமிருந்து வலமாக தாறு​மாறாக வாக​னங்​களை ஓட்​டினர்.

பொது​மக்​களுக்கு அச்​சத்​தை​யும், ஆபத்​தை​யும் ஏற்​படுத்​தும் வகை​யில் இருசக்கர வாக​னங்​களை ஓட்​டியதுடன், ஆபத்​தான முறை​யில் முன் சக்​கரத்தை தூக்கி வீலிங் செய்​துள்​ளனர்.

இதையடுத்து போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்து 2 இருசக்கர வாக​னங்​களை​யும் மடக்​கிப் பிடித்​தனர். அவற்​றில் பயணம் செய்த 3 இளைஞர்​களை கைது செய்து விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில் பிடிபட்​ட​வர்​கள் கிண்டி ஈக்​காட்​டுத்​தாங்​கல் பகு​தி​யைச் சேர்ந்த சந்​துரு (21), வினித் (20) மற்​றும் ஐயப்​பன்​தாங்​கலைச் சேர்ந்த ஆர்யா (19) என்​பது தெரிய​வந்​தது. அவர்​கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த இரு பைக்​கு​களும்​ பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT