க்ரைம்

பொன்னேரியில் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை விடுவிக்க ரூ.15,000 லஞ்சம்: சார்​-பதிவாளர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

பொன்​னேரி: பத்திரப்பதிவு செய்த ஆவணங்​களை விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்​சம் வாங்​கியது தொடர்​பாக சார்​-ப​தி​வாளர் உட்பட 3 பேரை நேற்று லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்​னை, அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் நடராஜன். இவர் சமீபத்​தில் பொன்​னேரி அருகே உள்ள சிறுளப்​பாக்​கம் கிராமத்​தில் 2 வீட்​டு மனை​களை வாங்கி அண்​மை​யில் பொன்​னேரி சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​தில் பத்​திரப்​ப​திவு செய்​தார்.

அவ்​வாறு பத்திரப்பதிவு செய்த ஆவணங்​களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்​சம் தரவேண்​டும் என, நடராஜனிடம் பொன்​னேரி சார்​-ப​தி​வாளர் சங்​கர் கேட்​டுள்​ளார்.

ஆனால் லஞ்​சம் கொடுக்க விரும்​பாத நடராஜன், சார்​-ப​தி​வாளர் சங்​கர் மீது திரு​வள்​ளூர் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்.

பின்​னர் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸாரின் ஆலோ​சனை​யின்​படி, நேற்று காலை நடராஜன், பொன்​னேரி சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​தில் பத்​திரப்​ப​திவு எழுத்​தர் ரமேஷ், அவரின் உதவி​யாளர் நித்யா ஆகியோர் மூலம் சார்​-ப​தி​வாளர் சங்​கரிடம் ரசாயன பவுடர் தடவப்​பட்ட ரூ.15 ஆயிரத்தை லஞ்​ச​மாக அளித்​தார்.

அப்​போது அங்கு மறைந்​திருந்த டிஎஸ்பி ஜெயக்​கு​மார் தலை​மையி​லான திரு​வள்​ளூர் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார், லஞ்​சம் வாங்​கிய பொன்​னேரி சார்​-ப​தி​வாளர் சங்​கர், இடைத்​தர கர்​களாக செயல்​பட்ட ரமேஷ், நித்யா ஆகிய 3 பேரை கையும்​ களவு​மாக பிடித்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT