க்ரைம்

மலேசியாவுக்கு கடத்தவிருந்த ரூ.15 கோடி மெத்தம் பெட்டமைன் பறிமுதல்: சிவகங்கையில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்​கை​யில் இருந்து மலேசி​யா​வுக்கு கடத்​த​விருந்த ரூ.15 கோடி மதிப்​பிலான 3.1 கிலோ மெத்​தம்​ பெட்​டமைனை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

தமிழகத்​தில் போதைப்​பொருள் விற்​பனை, கடத்​தலை தடுக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இதையடுத்​து, சிவகங்கை மாவட்ட போலீ​ஸார் போதைப் பொருள் விற்​பனைக் கும்​பலை தீவிர​மாகக் கண்​காணிக்​கின்​றனர். இந்​நிலை​யில் சிவகங்கை இந்​திரா நகர் ரயில்வே கேட் பகு​தி​யில் மெத்​தம்​ பெட்​டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்​திருப்​ப​தாக மாவட்ட காவல்கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத்​துக்கு தகவல் கிடைத்​தது. அவரது உத்​தர​வின்​பேரில், சிவகங்கை நகர் போலீ​ஸார் அங்கு நேற்று சோதனை​யிட்​டனர்.

அப்​போது, அங்கு பதுங்​கி​யிருந்த இளை​யான்​குடி புதூரைச் சேர்ந்த ரசூல்​தீன் (35), சென்னை திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த அபு என்ற சகுபர் ​சா​திக் (26), திருச்​சி​யைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (28), முகமதுரபீக் என்ற பாபு (30) ஆகியோரிடம் செயற்கை உயர்ரக போதைப்​பொருளான மெத்​தம்​பெட்​டமைன் 3.1 கிலோ இருந்​தது. இதன்சர்​வ​தேச மதிப்பு ரூ.15 கோடி. இதைத் தொடர்ந்து போதைப் பொருளை பறி​முதல் செய்த போலீ​ஸார் 4 பேரை​யும் கைதுசெய்​தனர். அவர்​களிடம் விசா​ரித்​த​தில், மெத்​தம்​ பெட்​டமைனை மலேசியா நாட்​டுக்கு கடத்​த​விருந்​தது தெரிய வந்​தது.

அவர்​களிடம் இருந்து பறி​முதல் செய்த செல்​போன்​களை ஆய்வு செய்​த​தில் அவர்​கள் பல ஆண்​டு​களாக போதைப் பொருட்​கள் கடத்​தலில் ‘குருவி​களாக’ செயல்​பட்டு வந்​ததும், தமிழகம் முழு​வதும் பலருடன் தொடர்​பில் இருந்​ததும் தெரிய வந்​துள்​ளது. இதையடுத்​து, அவர்​களு​டன் இணைந்து போதைப்​பொருட்​கள் கடத்​தலில் ஈடு​பட்டு வந்​தவர்​கள் குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT