குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதை கண்டித்து, ஓசூர் கெலமங்கலம் அருகே லாளிக்கல்லில் உள்ள தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள். (உள்படம்) நீலுகுமாரி குப்தா 
க்ரைம்

தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே பெண் தொழிலா​ளர்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய வடமாநில பெண் கைது செய்​யப்​பட்​டார். ஓசூர் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரி​யும் பெண்​கள் தங்​கும் விடுதி லாளிக்​கல் பகு​தி​யில் உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள் தங்கியுள்ளனர்.

இந்​நிலை​யில், விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பெண்​கள் விடுதி முன்பு தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்​சி​யர் அக்​ரிதி சேத்தி மற்​றும் எஸ்​.பி. தங்​கதுரை ஆகியோர் விசா​ரணை நடத்​தினர். பதற்​ற​மான சூழல் நில​விய​தால் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புக்​காக குவிக்​கப்​பட்​டனர்.

விசா​ரணை​யில், அங்கு தங்​கி​யுள்ள ஒடிசா மாநிலத்​தை சேர்ந்த சக தொழிலாளி நீலுகு​மாரி குப்தா (22) என்​பவர் ரகசிய கேம​ராவைப் பொருத்​தி​யது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், தொழிலா​ளர்​கள் தர்​ணாவைக் கைவிட்​டனர். இதையறிந்த பெண் தொழிலா​ளர்​களின் பெற்​றோர் வெளி மாவட்​டங்​களி​லிருந்து நேற்று காலை விடு​திக்கு வரத் தொடங்​கினர்.

விடு​தி​யில் தங்​கி​யிருந்த பெண் தொழிலா​ளர்​களிடம் உதவி ஆட்​சி​யர் தலை​மை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இதற்​கிடை​யில், 200-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் விடு​தியை காலி செய்​து​விட்​டு, தங்​கள் ஊர்​களுக்குப் புறப்​பட்டு சென்​றனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி சங்​கர் கூறும்​போது, “கேமரா பொருத்​தப்​பட்ட 30 நிமிடங்​களில் அகற்​றப்​பட்​டு​விட்​டது.

அதில் வீடியோ எது​வும் பதி​வாக​வில்​லை. வேறு அறை​களில் கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ளதா என்று 100-க்​கும் மேற்​பட்ட பெண் போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர்” என்​றார். இதனிடையே மாவட்ட காவல் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பில், “ரகசிய கேமரா பொருத்​தப்​பட்ட சம்​பவம் தொடர்பாக தவறான தகவல்​களை சமூக வலை​தளத்​தில் யாரும் பரப்​பக்​ கூடாது” என்​று எச்​சரித்​துள்​ளனர்​.

ஆண் நண்பர் கைது: இந்நிலையில், கைதான நீலுகு​மாரி குப்​தா​விடம் நடத்​திய விசா​ரணை​யில், பெங்​களூருவில் பணிபுரி​யும் அவரது ஆண் நண்​பர் சந்​தோஷ் என்​பவரின் ஆலோ​சனைப்​படி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​தி​ய​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, பெங்​களூரு சென்ற போலீ​ஸார் நேற்று மாலை சந்​தோஷை கைது செய்​து, அவரது செல்​போனை பறி​முதல் செய்​தனர். பின்​னர் அவரை ஓசூருக்கு அழைத்து வந்து விசா​ரித்​தனர். மேலும், விடுதி வார்​டன் சரி​தா​விட​மும் போலீஸார் வி​சா​ரணை மேற்கொண்டனர்​.

SCROLL FOR NEXT