லோகேஸ்​வரி 
க்ரைம்

பொன்னேரி | திருமணமான 4-வது நாளில் இளம்பெண் தற்கொலை: ஒரு பவுன் நகைக்காக கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் கைது 

செய்திப்பிரிவு

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம் பொன்​னேரி அருகே உள்ள முஸ்​லீம் நகரை சேர்ந்த கஜேந்​திரன் - சவுந்​தரி தம்​ப​தி​யின் மூத்த மகள் லோகேஸ்​வரி (24). பி.ஏ (பொருளா​தா​ரம்) முடித்த இவருக்​கும், பொன்​னேரி வட்​டத்​துக்கு உட்​பட்ட காட்​டாவூர் கிராமத்​தைச் சேர்ந்த தனி​யார் நிறுவன ஊழிய​ரான பன்​னீர் (37) என்​பவருக்​கும் சமீபத்​தில் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்டு கடந்த 27-ம் தேதி காட்​டாவூர் கிராமத்​தில் அமைந்​துள்ள அம்​மன் கோயி​லில் திரு​மணம் நடை​பெற்​றது.

திரு​மணத்​துக்கு முன்​ன​தாக லோகேஸ்​வரி குடும்​பத்​தினரிடம், பன்​னீர் குடும்​பத்​தினர், 10 பவுன் வரதட்​சணை கேட்​டுள்​ளனர். அப்​போது, லோகேஸ்​வரி குடும்​பத்​தினர் 5 பவுன் தரு​வ​தாக உறு​தி​யளித்​துள்​ளனர். தொடர்ந்​து, திரு​மணத்​தின்​போது, லோகேஸ்​வரி குடும்​பத்​தினர் 4 பவுன் நகை வரதட்​சணை​யாக​வும், சீர் வரிசை பொருட்​கள், மோட்​டார் சைக்​கிள் ஆகிய​வற்றை சீதன​மாக​வும் கொடுத்ததாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், லோகேஸ்​வரியை அவரது கணவர் குடும்​பத்​தினர், வரதட்​சணை​யில் பாக்​கி​யுள்ள ஒரு பவுன் நகையை பெற்​றோரிடம் வாங்கி வரு​மாறு கொடுமைப்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இச்​சூழலில், மறு​வீட்​டுக்​காக நேற்று முன் தினம் பெற்​றோர் வீட்​டுக்கு வந்​திருந்த லோகேஸ்​வரி, கழிப்​பறை​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இதுகுறித்​து, தகவலறிந்த பொன்​னேரி போலீ​ஸார், லோகேஸ்​வரி​யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்​து, லோகேஸ்​வரி​யின் பெற்​றோர், ஒரு பவுன் நகைக்​காக கணவர் குடும்​பத்​தினர் கொடுமைப்​படுத்​தி​ய​தால் லோகேஸ்​வரி தற்​கொலை நடந்​துள்​ள​தாக பொன்​னேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளனர்.

லோகேஸ்​வரி​யின் கணவர் பன்​னீர், அவரது குடும்​பத்​தினரிடம் விசாரணை நடத்திய போலீ​ஸார் பன்னீர், மாமியார் பூங்கோதையை நேற்று கைது செய்தனர். தலைமறைவான லோகேஸ்வரியின் மாமனார் ஏழுமலை, நாத்தனார் நதியா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT