ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், உடன், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா. (உள்படம்) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ், ஞானசேகரன். 
க்ரைம்

சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கு: 4 பேர் கைது பின்னணியும், அண்ணாமலை பாராட்டும்!

செய்திப்பிரிவு

ஈரோடு: சிவகிரி​யில் வயதான தம்​பதி கொல்​லப்​பட்ட வழக்​கில் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்கு பல்​லடம் அருகே மூவர் கொல்​லப்​பட்ட வழக்​கிலும் தொடர்​புள்​ள​தாக மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார் கூறி​னார்.

ஈரோடு மாவட்​டம் சிவகிரி அடுத்த விளக்​கேத்தி மேகரை​யான் தோட்​டத்​தில் வசித்து வந்த ராம​சாமி(72), அவரது மனைவி பாக்​கி​யம்​(63) ஆகியோர் பணம், நகைக்​காக ஏப்​ரல் 28-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டனர். குற்​ற​வாளி​களைக் கண்​டறிய ஈரோடு எஸ்​.பி. சுஜாதா தலை​மை​யில் 12 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், கொலை வழக்​கில் தொடர்​புடைய 4 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ராம​சாமி, பாக்​கி​யம் தம்​பதி கொலை வழக்​கில் அறச்​சலூர் வீரப்​பம்​பாளை​யத்​தைச் சேர்ந்த ஆச்​சி​யப்​பன்​(48), தெற்கு வீதி​யைச் சேர்ந்த மாதேஸ்​வரன் (52), புதுக்​காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகியோரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அவர்​கள் ராம​சாமி-​பாக்​கி​யம் தம்​ப​தியை கொன்​றதை ஒப்​புக்​கொண்​டதையடுத்​து, மூவரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் ஏப். 28-ம் தேதி நள்​ளிர​வில் ராம​சாமி தோட்​டத்​துக்கு சென்று மின்​சா​ரத்தை துண்​டித்​துள்​ளனர். அப்​போது வெளியே வந்த பாக்​கி​யத்தை கட்​டை​யால் தாக்கி கொன்​றுள்​ளனர். சப்​தம் கேட்டு வந்த ராம​சாமியை​யும், கட்​டை​யால் தாக்கி கொன்​றுள்​ளனர். பின்​னர், பாக்​கி​யம் அணிந்​திருந்த பத்தே முக்​கால் பவுன் நகை​யைப் பறித்​துக் கொண்டு தப்​பி​உள்​ளனர்.

கொள்​ளை​யடித்த நகையை சென்​னிமலை​யைச் சேர்ந்த ஞான​சேகரன் என்​பவரிடம் கொடுத்து உருக்​கி​யுள்​ளனர். அவர்​கள் அளித்த தகவலின் பேரில் உருக்​கப்​பட்ட தங்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் ஞான​சேகரனும் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். கைது செய்​யப்​பட்ட நால்​வரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து இருசக்கர வாக​னம், மரக்​கட்​டை, கொலை​யான ராம​சாமி​யின் செல்​போன் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

கைதான ஆச்​சி​யப்​பன் தோட்ட வேலை செய்​வது​போல தனி​யாக உள்ள தோட்​டங்​களுக்​குச் சென்று நோட்​ட​மிட்​டுள்​ளார். அவர் அளிக்​கும் தகவலின்​பேரில் மூவரும் இணைந்​து, தனி​யாக வசிக்​கும் வயதானவர்​களைக் கொலை செய்​து, நகை​யைத் திருடியுள்ளனர்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி​பாளை​யம், சேமலைக்​கவுண்​டன்​பாளை​யத்​தில் வசித்​து ​வந்த தெய்​வசி​காமணி(78), அவரது மனைவி அலமாத்​தாள்​(74), மகன் செந்​தில்​கு​மார்​(44) ஆகியோர் 2024 நவம்​பர் 28-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து ஐந்​தரை பவுன் நகை கொள்​ளை​யடிக்​கப்​பட்​டது. இந்த வழக்​கிலும் தற்​போது பிடிபட்ட மூவருக்​கும் தொடர்பு உள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​வ​தால், நீதி​மன்​றம் மூலம் காவலில் எடுத்​து, விசா​ரணையை மேற்​கொள்ள உள்​ளனர். மேலும், ஈரோடு, திருப்​பூர், கோவை பகு​தி​களில் நடந்த மற்ற குற்ற சம்​பவங்​களி​லும் இவர்​களுக்கு தொடர்பு உள்​ளதா என்று விசா​ரித்து வரு​கிறோம். இது​போன்ற குற்ற சம்​பவங்​கள் மேலும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில் ரோந்​துப் பணி​கள் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அண்​ணா​மலை​ பாராட்டு: சிவகிரி கொலை சம்​பவத்தை எதிர்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் கண்​டித்​திருந்​தனர். பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை சிவகிரி​யில் நடந்த கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் பேசும்​போது, “வரும் 20-ம் தேதிக்​குள் இந்த வழக்​கில் குற்​ற​வாளி​களைக் கைது செய்​யா​விட்​டால், சிவகிரி​யில் எனது தலை​மை​யில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடை​பெறும்” என்று அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், அவரது கெடு​வுக்கு ஒரு​நாள் முன்​ன​தாக குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதையடுத்து, காவல் துறைக்கு பா​ராட்​டுத் தெரி​வித்​துள்ள அண்ணா​மலை, உண்ணா​விரதம்​ ரத்​து செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT