ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத் துறையினர் திருப்புல்லாணி கடற்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
களிமண்குண்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த ஒரு ஸ்கூட்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சீட்டுக்கு அடியில் தங்கக் கட்டிகள் இருந்தன. விசாரணையில் அவர், மண்டபம் அம்பலக்கார தெருவைச் சேர்ந்த சல்மான்கான்(26) என தெரியவந்தது. அவரை கைது செய்த சுங்கத் துறையினர், ரூ.9 கோடி மதிப்புஉள்ள 15 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கைதான நபரிடம் விசாரித்தபோது, வேறொரு வாகனத்தில் வந்த ஒருவர், களிமண்குண்டு அருகே தங்கக்கட்டிகளை கொடுத்து தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூறியதாகவும், அதன்படி கொண்டு வந்ததாகவும் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.
தங்கக்கட்டியை மற்றொரு நபர் கொடுத்தது உண்மையா? அந்த நபர் யார் என சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.