க்ரைம்

மதுரையில் போலீஸாரின் பைக்கை திருடியதாக 2 பேர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை கரிமேடு குற்றப் பிரிவில் பணிபுரிபவர் பால முருகன் (40). இவருக்கு ரோந்து பணிக்கு செல்வதற்காக மாநகர் காவல்துறை சார்பில் பைக் வழங்கப்பட்டது.

கடந்த 2-ம் தேதி ஆரப்பாளையம் பகுதியில் நிறுத்தியிருந்த இந்த பைக் திருடு போனது. இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம். இது குறித்து கரிமேடு போலீஸில் பாலமுருகன் புகார் செய்தார். போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகிலுள்ள வேம்பளியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு (30), திண்டுக்கல் மாவட்டம், அலவச்சிபட்டி பழனிச்சாமி மகன் ரஞ்சித் குமார் (20) ஆகியோர் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்து பைக்கை மீட்டனர்.

SCROLL FOR NEXT