தமிழ் சினிமா

இந்திய திரைத் துறையில் பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திவ்யபாரதி புகாரில் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழில் பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​திருப்​பவர் திவ்​ய​பார​தி. தெலுங்​கிலும் நடித்து வரு​கிறார். இவர் ‘கோட்’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்​களுக்கு முன் குற்​றம் சாட்டியிருந்​தார்.

நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்​யபார​தி, “பெண்​களை ‘சில​கா’ (பறவை) போன்ற வார்த்​தைகளால் அழைப்​பது நகைச்​சுவைஅல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்​பிலும் அந்த இயக்​குநர் பெண்​களை அவம​திக்​கும் வார்த்​தைகளை மீண்​டும் மீண்​டும் பயன்​படுத்​தி​னார்.

அவருடைய நடவடிக்​கைகளை நேரில் பார்த்​துக் கொண்​டிருந்த அந்​தப் படத்​தின் ஹீரோ (சுடி​காலி சுதீர் ) எது​வும் பேசாமல் இருந்​தது ஏமாற்​றத்​தைத் தந்​தது. பெண்​களை அவம​திக்​காத, மரி​யாதை குறை​யாத இடங்​களில் மட்​டுமே பணி​யாற்ற விரும்​பு​கிறேன்” என்று கூறி​யிருந்​தார்.

அவரது குற்​றச்​சாட்​டுப் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் அனைத்​திந்​திய திரைப்​படத் தொழிலா​ளர்​கள் சங்​கம், நடிகை திவ்யபார​திக்கு ஆதரவு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அச்​சங்​கம் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “திரைப்​படங்களில் பணிபுரி​யும் எந்த பெண்​ணாக இருந்​தா​லும் இது​போன்ற சம்​பவங்​களை ஒரு​போதும் பொறுத்​துக்கொள்ள முடி​யாது. ஆனாலும் துர​திர்​ஷ்ட​வச​மாக, இது​போன்ற சம்​பவங்​கள் நடக்கின்றன.

இந்த அவமானத்​துக்கு எதி​ராகக் குரல் எழுப்​பிய திவ்​ய​பார​தி​யின் தைரி​யத்​துக்​குப் பாராட்​டு​கள். ஓய்​வு​பெற்ற பெண் நீதிபதி தலை​மை​யில், இந்​தி​யத் திரைப்​படத் துறை முழு​வதும் பெண்​களின் புகார்​களைக் கேட்டு தீர்க்க ‘பெண்​கள் குறைதீர்ப்​புக் குழு’ அமைக்​கப்பட வேண்​டும் என்று கோரு​கிறோம்.

திவ்ய பார​தி​யின் வழக்கை கவனத்​தில்​ கொண்​டு, கடும்​ நடவடிக்கை எடுக்​க தேசிய மகளிர் ஆணையத்​தை வலி​யுறுத்​துகிறோம்​” என்​று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT