ஜனநாயகன் போஸ்டர் | உள்படம்: தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி

 
தமிழ் சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ சான்றிதழ் விவகாரம்: கருத்து தெரிவிக்க தணிக்கை வாரிய தலைவர் மறுப்பு

செய்திப்பிரிவு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட சான்றிதழ் விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி மறுத்துள்ளார்.

விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ படத்தை கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்​துள்​ளது. ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்ள இதை ஜன.9-ல் வெளி​யிடத் திட்​ட​மிட்​டிருந்த னர். படத்​துக்​குத் தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து தயாரிப்பு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்​குப் பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். அதை எதிர்த்து தணிக்கை வாரி​யத்தின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான அமர்​வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்​புக்​குத் தடை விதித்து மேல்​முறை​யீட்டு வழக்கை ஜன.20-ம் தேதிக்​குத் தள்ளி வைத்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்பட்​டது. அதை தள்​ளு​படி செய்த உச்ச நீதி​மன்​றம், “சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வை நாடுங்​கள். ஜன. 20-ம் தேதியே இந்த விவ​காரத்தை கூடு​மான வரை விசா​ரித்து அன்றே உத்​தரவு பிறப்​பிக்க நடவடிக்கை எடுக்​கும்” என்று கூறி மேல்​முறை​யீட்டு மனுவை முடித்து வைத்​தது.

இந்​நிலை​யில், ஆங்​கில ஊடகம் ஒன்று பேட்​டியளித்த மத்​திய தணிக்கை வாரிய தலை​வர் பிரசூன் ஜோஷி​யிடம் ‘ஜன​நாயகன்’ தணிக்கை பிரச்​சினை பற்றி கேட்​கப்​பட்​டது. அந்த விவ​காரம் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ள​தால் அதுபற்றி பேச மறுத்​து​விட்​டார்.

பின்​னர் “த டாக்​ஸிக்” படத்​தின் டீஸர் சர்ச்சை பற்றி கேட்​ட​போது, “தற்​போது நான் எந்​தக் கருத்​தை​யும் தெரிவிக்க விரும்​ப​வில்​லை. ஆனால் ஒரு விஷ​யத்​தைத் தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன். யூடியூப் மற்​றும் பிற டிஜிட்​டல் தளங்​களில் வரும் பல விஷ​யங்​கள் தணிக்கை சான்று பெறாதவை. அவை மத்​திய திரைப்​படத் தணிக்கை வாரி​யத்​தின் அதி​கார வரம்​புக்​குள் வரு​வ​தில்​லை. ஆன்​லைனில் தாங்​கள் பார்க்​கும் அனைத்​தும் தணிக்கை செய்​யப்​பட்​டவை என்ற அனு​மானத்​துக்கு யாரும் வரவேண்​டாம்.

திரைப்பட தணிக்கை வாரிய உறுப்​பினர்​களுக்​குப் படங்​கள் பார்த்து சான்​றிதழ் அளிப்​பது கடின​மான வேலை. அவர்​கள், திரைப் பட இயக்​குநர்​கள் சொல்​வதை​யும் சமூகம் எதிர்​பார்ப்​ப​தையும்​ சமநிலைப்​படுத்​த முயற்​சிக்​கிறார்​கள்​” என்றார்.

SCROLL FOR NEXT