தமிழ் சினிமா

உயர்ந்த மனிதன்: அசோகனுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த சிவாஜி!

செ. ஏக்நாத்ராஜ்

சினிமா கூட்டு முயற்சி என்​பது எல்​ லோருக்​கும் தெரிந்​தது​தான். இம்​முயற்​சி​யில் நடிகர், நடிகைகள், தயாரிப்​பாளர், இயக்​குநர், தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்​குள் எழும் சின்ன சின்ன மனஸ்​தாபங்​கள், ஈகோ மோதல்​கள் இயல்​பானது. இக்​கசப்​பு,அப்​படம் முடி​யும் வரை இருக்​கும். அல்​லது அவர்​களு​டன் பணி​யாற்​றும் அடுத்​தப்​படம் வரை தொடரலாம். அப்​படி சிலருக்கு ஏற்​பட்​டிருந்த மனக்​கசப்​பு​களை மாற்​றிய படம் ‘உயர்ந்த மனிதன்’!

வங்க மொழி​யில் வெளி​யான, ‘உத்​தர் புருஷ்’ என்ற படம் நன்​றாக ஓடு​வ​தாக, ஏவி.எம் நிறு​வனத்​தின் கொல்​கத்தா பங்​கு​தா​ரர் விஏபி ஐயர் சொன்​னதை அடுத்து அந்​தப் படத்தை சென்​னை​யில் பார்த்​தார்​கள். ஏவி.எம் நிறு​வனத்​துக்கு அதன் கதைப் பிடித்​திருந்​த​தால் தமிழுக்​காக சில மாற்​றங்​களைச் செய்​து, திரைக்​கதையை உரு​வாக்​கி​னார்​கள். ஜாவர் சீதா​ராமன் அதை சிறப்​பாகச் செய்​தார்.

கோடீஸ்​வரன் மகனான ராஜு, தனது நண்​பர்​கள் டாக்​டர் கோபால், சுந்​தரத்​துடன் கொடைக்​கானலில் உள்ள தனது எஸ்​டேட்​டுக்கு அடிக்​கடி செல்​கிறார். அங்கு வேலை​பார்ப்​பவரின் மகள்பார்​வ​தியை காதலிக்​கும் ராஜு, அப்​பாவுக்​குத் தெரி​யாமல் திரு​மணம் செய்​து​கொண்டு எஸ்டேட்​டில் வாழ்​கிறார். பார்​வதி கர்ப்​ப​மாகிறார். கோடீஸ்வர தந்​தைக்கு விஷ​யம்தெரிய​வர, பார்​வ​தி​யின் குடிசைக்​குத் தீ வைக்​கிறார். அவரை காப்​பாற்ற முடி​யாத ராஜு, குற்ற உணர்ச்​சி​யால் தவிக்​கிறார். பிறகு ராஜுவை மிரட்​டி, அவருக்கு விமலா​வைத் திரு​மணம் செய்து வைக்​கிறார் அப்​பா.

இந்​நிலை​யில் அவர்​கள் வீட்​டுக்கு வேலைக்கார​னாக வரு​கிறான், பொய்யே பேச​மாட்​டேன் என்ற உறு​தி​யுடன் இருக்கும் சத்​யமூர்த்​தி. அவன் மேல் பாச​மாக இருக்கிறார் ராஜு. ஒரு கட்​டத்​தில் சத்​யமூர்த்தி தனது மகன் என தெரிய​ வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்​பது கதை. இதில் ராஜு​வாக சிவாஜி கணேசன், கோபாலாக அசோகன், சுந்​தர​மாக மேஜர் சுந்​தர்​ராஜன்,பார்​வ​தி​யாக வாணி, விமலா​வாக சவு​கார் ஜானகி, சத்​யமூர்த்​தி​யாக சிவகு​மார் நடித்​தனர். மேலும் பார​தி, மனோர​மா, ஜி.சகுந்​தலா, வி.கே.​ராம​சாமி, வி.​நாகை​யா, எஸ்​.​வி.​ராம​தாஸ், வி.எஸ்​.​ராகவன் என பலர் நடித்​தனர்.

எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் இசை​யில் அனைத்துப் பாடல்​களை​யும் வாலி எழு​தி​இருந்​தார். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்​சிலே’, ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’, ‘என் கேள்விக்​கென்ன பதில்’, ‘வெள்​ளிக்​கிண்​ணம்​தான்​...’, ‘அத்தானின் முத்​தங்​கள்’ என அனைத்​துப் பாடல்​களும் வரவேற்​பைப் பெற்​றன.

‘என் கேள்விக்​கென்ன பதில்’ பாடலில் சிவகு​மாரும் பார​தி​யும் நடித்​தனர். முதலில் பாடல் காட்​சியை ஷுட் செய்​து​விட்​டார்​கள். போட்​டுப் பார்த்த ஏவி.எம்​.செட்​டி​யார், “கதைப்​படி சிவகு​மார் ஏழை, நாயகி டிரைவரின் மகள். இரு​வரும் மாடர்ன் டிரெஸ்​சில் வெஸ்​டர்ன் இசைக் கொண்ட பாடலில் ஆடு​கிறார்​கள்? இது எப்​படி கதைக்​குப் பொருந்​தும். இப்​பாடலை நீக்​கிவிடுங்கள்” என்று சொல்​லி​விட்​டார்.

பிறகு ட்யூனை மட்​டும் வைத்​துக்​கொண்​டு,புல்​லாங்​குழல், சித்​தார் போன்ற வாத்​தி​யங்​களை வைத்து பாடலை மாற்றி ஒலிப்​ப​திவு செய்​து​கொடுத்​தார் எம்​.எஸ்​.​வி. இதற்​குப் பிறகு பாடல் காட்​சி​யில் மாடர்ன் டிரெஸ் இல்​லாமல் சிவகு​மாரும் பார​தி​யும் தொட்​டுக் கொள்​ளாமல் பாடு​வது போல ரீஷூட் செய்​தார்​கள்.

‘அந்த நாள் நாபகம் நெஞ்​சிலே வந்​ததே’ பாடலை, ‘மை ஃபேர் லேடி’ என்ற ஆங்​கிலப் படத்​தின் பாதிப்​பில், பாடலுக்கு இடையே வசனம் வரு​வது​போல உரு​வாக்கி இருந்​தார்​கள். ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’ பாடல் காட்​சியை கொடைக்​கானலில் படமாக்​கத் திட்​ட​மிட்​டார்​கள். அப்​போது மழைக்​காலம் தொடங்​கி​விட்​ட​தால், அங்கு படமாக்க முடி​யாத நிலை. இதனால் கொடைக்​கானல் போலவே தத்ரூப​மாக செட் போட்டு அப்​பாடல் காட்​சியை படமாக்​கி​னார்​கள்.

அந்​தப் பாடல், பி.சுசீலா​வுக்கு தேசிய விருதைப் பெற்று தந்​தது. சிவாஜி கணேசனுக்​கும் ஏவி.எம் நிறு​வனத்​துக்​கும் மனக்​கசப்பு இருந்​த​தால், அந்த நிறு​வனம் தயாரிக்​கும் படங்​களில் சில காலம் நடிக்​காமல் இருந்​தார். இந்​நிலை​யில் இந்​தப் படத்​துக்​காக யாரை ஹீரோ​வாக நடிக்க வைக்​கலாம் என்று விவா​தித்​த​போது, சிவாஜி பெயரை சொன்​னார், ஏவி.எம்​.சர​வணன். சரி என்​றார், ஏவி.மெய்​யப்​பச் செட்​டி​யார்.

சிவாஜி​யிடம் கேட்​டதும் பழைய கருத்​து​வேறு​பாட்டை மறந்து “சரி, நடிக்​கிறேன்” என்​றார். படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்​கு​வார்​கள் என்​றதும், “அவங்க இயக்​கத்​துல நடிக்க மாட்​டேன், எங்​களுக்கு சரிபட்டு வராது” என்​றார் சிவாஜி. முதல் நாள் படப்​பிடிப்​பிலேயே எல்​லாம் சரி​யாகி​விடும் என்று கூறி, அவரை ஒப்​புக்​கொள்ள வைத்​தார், ஏவி.எம். சரவணன்.

சிவாஜிக்​கு, அசோகன் நடித்த டாக்​டர் வேடத்​தின் மேல் ஆர்​வம். ஆனால், ஏவி.எம் நிறு​வனம் அசோகனை அந்த கேரக்​டருக்கு முதலிலேயே ஒப்​பந்​தம் செய்​து​விட்​டது. சிவாஜிக்​கும் அசோக​னுக்​கும் வேறு ஏதோ மனக்​கசப்பு இருந்​தது. ஆனால் ஷூட்​டிங் தொடங்​கியதும் இரு​வரும் எந்த இடத்​தி​லும் அதை வெளிக் காட்​டவில்லை. அதை மறந்து நண்​பர்​களாகவே பழகி​னார்​கள்.

அசோகன் நெஞ்​சுவலி​யால் துடித்து இறப்​பது​போல படத்​தில் ஒரு காட்சி வரும். அதில் எப்​படி நடிக்க வேண்​டும், முகப்​பாவங்​களை எப்​படி காட்ட வேண்​டும் என்று அவருக்​கு சொல்​லிக்​கொடுத்​தார் சிவாஜி.

இப்​படத்​தின் கிளை​மாக்ஸ் காட்​சி​யை, ஒரு பங்​களா​வில் தீ பிடித்து எரிவது​போல​வும் உள்ளே சிவகு​மாரும் சிவாஜி​யும் இருப்​பது போல​வும் படமாக்கி இருந்​தனர். தீ, நிஜ​மாகவே கொளுந்​து​விட்டு எரிய, 4 கேம​ராக்​களை வைத்து படமாக்​கினர். நெருப்பு தொடர்ந்து எரிந்ததால் சுவாசிக்க முடி​யாமல் மயங்கி கீழே விழுந்​ததாக சிவகு​மார் தெரி​வித்​திருக்​கிறார்.

தன் வீட்​டில் வேலைக்​கார​னாக இருப்​பதும் தான் அடித்து விரட்​டியதும் தனது மகன் என்று தெரிந்​ததும் சிவாஜி கொடுக்​கும் எக்​ஸ்​பிரஷன்​கள் பேசப்​பட்​டன. சிவாஜி​யின் 125-வது படமான இதற்​காக அவருக்கு கொடுக்​கப்​பட்ட சம்​பளம் ரூ.1.5 லட்​சம். 1968-ம் ஆண்டு இதே நாளில் (நவ.29) வெளி​யான இந்​தப் படம் 125 நாட்​களுக்கு மேல் ஓடியது.

SCROLL FOR NEXT