தமிழ் சினிமா

என் இனிய தமிழ் மக்களே... உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

செய்திப்பிரிவு

இயக்குநர் பார​தி​ராஜா​வின் இயற்​பெயர் சின்​ன​சாமி. தேனி மாவட்​டம் அல்​லி நகரத்​தில் கடந்த 1941-ம் ஆண்டு பெரிய மாயத்​தேவர், மீனாட்சி அம்​மாள் என்​கிற கருத்​தம்மா ஆகியோ​ருக்கு 5 வது குழந்​தை​யாக பிறந்​தவர், பார​தி​ராஜா. சுகா​தாரா ஆய்​வாள​ராக பணி​யாற்​றிய இவர் சினிமா ஆசை காரண​மாக, வேலையை விட்​டுட்டு சென்னை வந்​தார்.

இயக்​குநர் பி. புல்​லை​யா​விடம் உதவி இயக்​குந​ராக சேர்ந்​தார். தொடர்ந்​து, புட்​டண்ணா கனகலிடம் பணிபுரிந்​தார். பின்​னர் எம்.கிருஷ்ணன் நாயர், அவி​னாசி மணி, ஏ.ஜெகந்​நாதன் ஆகியோரிடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றி​னார்.

தமிழ் சினி​மா​வில் ‘கல்ட்’

1977-ம் ஆண்டு ‘பதி​னாறு வயதினிலே’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மா​னார். கமல்​ஹாசன், ரஜினி​காந்த், ஸ்ரீதே​வி, காந்​தி​ம​தி, கவுண்​டமணி உள்பட பலர் இதில் நடித்​தனர்.

இந்​தப் படம் அப்​போதைய வழக்​க​மான திரைப்​படப் பாணி​களை உடைத்​து, கிராமத்து வாசனையை, அதே புழுதி மண்​ணோடு பேசிய படமாக வெளி​யாகி பெரும் வெற்றி பெற்​றது.

சப்​பாணி​யாக கமலும் பரட்​டை​யாக ரஜினி​யும் மயிலு​வாக ஸ்ரீதே​வி​யும் வாழ்ந்​திருந்​தனர். இப்​படம் மூலம் ஸ்டூடியோக்​களில் அடைபட்டு கிடந்த சினி​மாவை தென்​மாவட்​டக் கிராமங்​களுக்​குக் கொண்டு சென்று பெரு​மைச் சேர்த்​தார் பாரதிராஜா.

தமிழ் மண்​ணின் வாழ்க்​கையை அதன் இயல்​போடு பேசிய ‘16 வயதினிலே’, தமிழ் சினி​மா​வில் ‘கல்ட்’ அந்​தஸ்​தைப் பெற்​றதுடன் இன்​று​வரை மைல்​கல்​லாகக் கருதப்​படு​கிறது.

சிவப்பு ரோஜாக்​கள்

இதையடுத்து பார​தி​ராஜா இயக்​கிய திரைப்​படம் ‘கிழக்கே போகும் ரயில்’ (1977). இதில் சுதாகரும் ராதி​கா​வும் அறி​முக​மா​னார்​கள். கிராமத்​துக் காதலை, அதன் வாழ்க்​கை​யை, யதார்த்​தங்​களோடு பேசிய இப்​படம் சூப்​பர் ஹிட் வெற்​றியைப் பெற்​றது.

இந்​தப் படங்​களின் வெற்​றி, பார​தி​ராஜாவுக்கு கிராமத்து கதைகளைத்​தான் இயக்​கத்​தெரி​யும் என்ற விமர்​சனத்​தைக் கொடுத்​தன. அதை மாற்ற வேண்​டும் என்று அவர் இயக்​கிய திரைப்​படம், ‘சிவப்பு ரோஜாக்​கள்’.

மேற்​கத்​திய ஸ்டைலில் பெண்​களை வெறுக்​கின்ற மனநலம் பாதிக்​கப்​பட்ட ஓர் இளைஞனின் கதை​யாக இதை இயக்​கி​னார். கமல்​ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இப்​பட​மும் வெற்றி பெற்​றது.

தொடர்ந்​து, ‘பு​திய வார்ப்​பு​கள்’ (1979), ‘நிறம் மாறாத பூக்​கள்’ (1979), ‘நிழல்​கள்’ (1980), ‘டிக் டிக் டிக்’ (1981), ‘காதல் ஓவி​யம்’ (1981), ‘வாலிபமே வா வா’ (1982) என வெவ்​வேறு ஜானர் திரைப்​படங்​களை அவர் இயக்​கி​னார்.

1980-களில் வெளிவந்த ‘அலைகள் ஓய்​வ​தில்​லை’, ‘மண் வாசனை’ (1982), புது​மைப்​பெண் (1984), ‘ஒரு கைதி​யின் டைரி’ (1984), ‘முதல் மரி​யாதை’ (1985), ‘கடலோர கவிதைகள்’ (1986) என வலு​வான திரைக்​கதை​யுடன் அவர் இயக்​கிய ஒவ்​வொரு திரைப்​பட​மும் இப்​போதும் பேசப்​படு​கின்​றன.

சாதிய பாகு​பாடு குறித்து ஆழமாகப் பேசி​யத் திரைப்​படம், ‘வேதம் புதிது’ (1987). இதில் பார​தி​ராஜா​வின் தனித்​து​வ​மான பாணி​யும், இதில் இடம்​பெற்ற புது​மை​யான காட்​சிகளும் பார்​வை​யாளர்​களிடையே பாராட்​டைப் பெற்​றன.

‘கொடிபறக்​குது’, ‘என்​னு​யிர் தோழன்’ (1990), ‘புதுநெல்லு புது நாத்​து’ (1991), ‘நாடோடி தென்​றல்’ (1992), ‘கிழக்​குச் சீமை​யிலே’ (1993), பெண் சிசுக்​கொலையை பேசி​ய ‘கருத்​தம்​மா’ (1994) என அவர் இயக்​கிய ஒவ்​வொரு படமும் அவருடைய தனித்​து​வத்​துக்​காகக் கவனிக்​கப்​பட்​டன.

சுமார் 40-க்​கும் மேற்​பட்ட படங்​களை இயக்​கி​யுள்ள அவர், தமிழில் மட்​டுமல்​லாமல், இந்​தி, தெலுங்​கிலும் இயக்கி இருக்​கிறார்.

சின்​னத்​திரை தொடர் திரைப்​படங்​களில் முத்​திரைப் பதித்த பார​தி​ராஜா, தெக்​கத்​திப் பொண்​ணு, அப்​பனும் ஆத்​தா​வும், முதல் மரி​யாதை உள்பட சில சின்​னத்​திரை தொடர்​களை இயக்​கி​யுள்​ளார். அவருடைய படங்​களில் பலருக்கு பின்​னணி குரலும் பேசி​யுள்​ளார்.

நடிக​ராக​வும் ஜொலித்​தார்

இயக்​குநர் பார​தி​ராஜா, ‘கல்​லுக்​குள் ஈரம்’ (1980) திரைப்​படத்​தில் ஹீரோ​வாக நடித்​தார். அவர் அப்​படத்​தில் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்தி இருந்​த​போதும் தொடர்ந்து திரைப் படங்​களில் நடிக்​க​வில்​லை.

பின்​னர் மணிரத்​னத்​தின் ‘ஆய்த எழுத்​து’ படத்​தில் மீண்​டும் நடிக்​கத் தொடங்​கி​னார். ‘ரெட்​டச்​சுழி’, ‘பாண்​டிய​நாடு’, ‘குரங்கு பொம்​மை’, ‘திருச்​சிற்​றம் பலம்’ உள்பட பல திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார்.

அறி​முகப்​படுத்​திய நடிகர், நடிகைகள்

தமிழ் சினி​மா​வில் அதிக புது​முகங்​களை அறி​முகப்​படுத்​திய பெருமை பார​தி​ராஜாவுக்கு உண்​டு. அவர் தனது கதா​நாயகி​களுக்கு ‘ர’ வரிசை​யில் பெயர்​களை​யும் வைத்​தார். பிரி​யாமணி, சுகன்​யா​வுக்கு மட்​டும் அவர் பெயரை மாற்​ற​வில்​லை.

நடிகைகள்: ராதிகா சரத்​கு​மார், (கிழக்கே போகும் ரயில்), ராதா (அலைகள் ஓய்​வ​தில்லை), ரேவதி (மண்​வாசனை), ரேகா (கடலோரக் கவிதைகள்), ரஞ்​சிதா (நாடோடித் தென்​றல்), பிரி​யாமணி (கண்​களால் கைது செய்), ரமா (என்​னு​யிர் தோழன்), சுகன்யா (புதுநெல்லு புது நாத்​து).

நடிகர்​கள்: கார்த்​திக் (அலைகள் ஓய்​வ​தில்​லை), பாண்​டியன் (மண்​வாசனை), நெப்​போலியன் (புதுநெல்லு புது நாத்​து), சுதாகர் (கிழக்கே போகும் ரயில்), மனோஜ் பார​தி​ராஜா (தாஜ்மஹால்), ரவி (நிழல்​கள்), வடிவுக்​கரசி (சிகப்பு ரோஜாக்​கள்), சந்​திரசேகர் போன்ற பல நடிகர்​களை அறி​முகப்​படுத்​தி​ய​வர் இவர்.

1981-ம் ஆண்டு தெலுங்​கில் இயக்​கிய ‘சீ​தாகோக சிலு​கா’ (அலைகள் ஓய்​வ​தில்லை ரீமேக்) திரைப்​படம் சிறந்த தெலுங்​குத் திரைப்​படத்​துக்​கான தேசிய விருதைப் பெற்​றது. ‘முதல் மரி​யாதை’, சிறந்த தமிழ்த் திரைப்படத்​துக்​கான தேசிய விருதை வென்​றது.

‘வேதம் புதிது’, சமூகப் பிரச்​சினை​களை அலசும் சிறந்த படத்​துக்​கான விருதை வென்​றது. பெண் சிசுக்​கொலை​யைப் பேசிய ‘கருத்​தம்​மா’, குடும்ப நலனை வலி​யுறுத்​தும் சிறந்​தப் படத்​துக்கான தேசிய விருதைப் பெற்​றது.

‘அந்​தி​மந்​தா​ரை’ சிறந்த தமிழ்ப் படத்​துக்​கான தேசிய விருதைப் பெற்​றது. ‘கடல் பூக்​கள்’ படத்​துக்​காக சிறந்த திரைக்​கதைக்​கான தேசிய விருது பார​தி​ராஜாவுக்கு வழங்​கப்​பட்​டது.

இதே போல தமிழக அரசின் 6 விருதுகளை​யும் பெற்​றுள்​ளார். திரைத்​துறைக்கு இவர் ஆற்​றிய பங்​களிப்​புக்​காக 2004-ம் ஆண்டு இந்​திய அரசு இவருக்கு ‘பத்​மஸ்ரீ’ விருது வழங்​கிக் கவுர​வித்​தது.

‘என் இனிய தமிழ் மக்​களே...’

பார​தி​ராஜா பேசத் தொடங்​கும்​போது ‘என் இனிய தமிழ் மக்​களே’ என்​று​தான் தொடங்​கு​வார். அவர் திரைப்​படங்​களின் தொடக்​கத்​தி​லும் இப்​படி பேசுவதை வழக்​க​மாக வைத்​திருந்​தார். அவருடைய இந்த கணீர் குரல் ரசிகர்​களுக்கு மிக​வும் பிடித்த ஒன்​றாக மாறிப்​போனது. அவர் அப்​படிச் சொல்​லும்​போது ரசிகர்​கள் கைத்​தட்டி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​து​வது வழக்​கம்.

படப்​பிடிப்பு இன்று ரத்து

பார​தி​ராஜா​வின் மறைவுக்கு அஞ்​சலி செலுத்​தும்​வித​மாக இன்று ஒரு நாள் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்​சித் தொடர் படப்​பிடிப்​பு​களை ரத்து செய்​வ​தாக பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தெரி​வித்​து உள்​ளார்.

SCROLL FOR NEXT